Thursday 25 January 2024

குடியரசு தின விழா

 


















குடியரசு தின விழாவில் அனைவருக்கும் சாக்லேட் தவிர்த்து கடலை மிட்டாய் இனிப்பு  வழங்கி கொண்டாடுதல்

 

தேவகோட்டை –  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் குடியரசு தின விழா நடைபெற்றது.



                  ஆசிரியர் ஸ்ரீதர்   வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.பள்ளி ஆசிரியை முத்துமீனாள்   கொடி ஏற்றி சிறப்புரையாற்றினார்.ஆசிரியர்களுக்கும்,பெற்றோர்களுக்கும்  சாக்லேட் தவிர்த்து  கடலை மிட்டாய் இனிப்பு
வழங்கப்பட்டது.இப்பள்ளியில் தொடர்ந்து பல ஆண்டுகளாக மாணவர்களின் பிறந்த நாள்களுக்கும், சுதந்திர தின விழா,குடியரசு தின விழா என அனைத்து விழாவிற்கும்  சாக்லேட் தவிர்த்து கடலை அச்சு மிட்டாய் இனிப்பாக வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.குடியரசு தின விழாவை முன்னிட்டு மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.அதில் வெற்றி மாணவ,மாணவியர் விஜய்கண்ணன்,சபரிவர்ஷன்,நந்தனா,ரித்திகா,தீபா,தவதுர்கா ,ஹரிப்ரியா,லெட்சுமி ஆகியோருக்கு  பரிசுகள் வழங்கப்பட்டது. ஏராளமான பெற்றோரும் பங்கேற்றனர். ஆசிரியர் செல்வம்      நன்றி கூறினார்.


பட விளக்கம் ; சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற குடியரசு  தின விழாவில் பள்ளியின் ஆசிரியை முத்தமீனாள்   கொடி ஏற்றி பேசினார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். ஆசிரியர்களுக்கும்,பெற்றோர்களுக்கும்  சாக்லேட் தவிர்த்து  கடலை மிட்டாய் இனிப்பு வழங்கப்பட்டது.

 

வீடியோ

https://www.youtube.com/watch?v=9PJbR-Wr9j

https://www.youtube.com/watch?v=6o0Ft0Y0OF0

https://www.youtube.com/watch?v=XEvV4yZCcc4

https://www.youtube.com/watch?v=PDGdppC1DO8






















































No comments:

Post a Comment