நிதி சார் கல்வி முகாம்
பட்ஜெட் போடுவது எப்படி ? மாணவர்ளுக்கு நிதி சார்ந்த விழிப்புணர்வு
தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு கிராம வங்கி மற்றும் நபார்டு வங்கி சார்பில் நிதிசார் கல்வி முகாம் நடந்தது.
ஆசிரியை செல்வமீனாள் வரவேற்றார்.முகாமிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். தமிழ்நாடு கிராம வங்கியின் தேவகோட்டை கிளை துணை மேலாளர் சுவாமிநாதன் மாணவர்களிடம் பேசுகையில் , ரவு,செலவு திட்டமிடுதல்,வங்கிக்கு ஏன் செல்கிறோம், வங்கியில் என்னவெல்லாம் செய்கிறார்கள் , வங்கி சேவை, கடனுதவி, சேமிப்பு திட்டங்கள் குறித்து மாணவர்களுக்கு விளக்கினார். மாணவர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு பதில் அளித்தார். வங்கி நகை மதிப்பீட்டாளர் வைரமணி நன்றி கூறினார்.
பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு கிராம வங்கி மற்றும் நபார்டு வங்கி சார்பில் நிதிசார் கல்வி முகாம் நடந்தது.
வீடியோ :
https://www.youtube.com/watch?v=yGD9EGIyTV8
https://www.youtube.com/watch?v=nQta3Fn6uT4
No comments:
Post a Comment