மூன்றாவது டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்ட அனுபவம்
தடுப்பூசி மட்டுமே நமக்கு பேராயுதம்
நண்பர்களே சமீபத்தில் மூன்றாவது டோஸ் தடுப்பு ஊசி செலுத்த சிறப்பு தடுப்பூசி முகாமிற்கு சென்றிருந்தேன். அங்கு எனது மொபைல் நம்பரை வாங்கி செக் செய்துவிட்டு மூன்றாவது டோஸ் தடுப்பு ஊசி செலுத்தினார்கள். தடுப்பூசியை அனைவரும் செலுத்தி கொள்ளுங்கள். அதுதான் நமக்கு மிகப்பெரிய பேராயுதம். எனவே ஏற்கனவே இரண்டு டோஸ் தடுப்பு ஊசி சரியான முறையில் செலுத்தி இருந்தேன். அதன் தொடர்ச்சியாக மூன்றாவது டோஸ் தடுப்பூசியும் செலுத்தி கொண்டேன். தேவகோட்டை ஒத்தகடை அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் சினேகா அவர்கள் நட்பான புன்னகையுடன் கணநேரத்தில் மிகப் பொறுமையாக ஊசியை செலுத்தினார்கள். மூன்றாவது டோஸ் தடுப்பு ஊசி மிக நல்ல முறையில் செலுத்தப்பட்டது .அனைவரும் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளுங்கள். அதுவே உங்களுக்கான மிகப்பெரிய ஆயுதமாக உதவிகரமானதாக இருக்கும்.
நட்புடன்
லெ .சொக்கலிங்கம்
தலைமையாசிரியர் ,
சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி,
தேவகோட்டை .
சிவகங்கை மாவட்டம்.
No comments:
Post a Comment