Wednesday 5 January 2022

புத்தாண்டில் புத்தகங்கள் வழங்குதல் 

வணக்கம் சொல்வது தமிழின் சிறப்பு - கல்லூரி முதல்வர் பேச்சு

தமிழக அரசின் விலையில்லா பாட புத்தகங்கள்,நோட்டுகள்,சீருடைகள் வழங்குதல் 

 






 தேவகோட்டை : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா பாட புத்தகங்கள்,நோட்டுகள் வழங்கப்பட்டது.

                         அரசு,அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மூன்றாம் பருவ பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் ,நோட்டுகள்,சீருடைகளை  தேவகோட்டை ஆனந்தா கல்லூரி முதல்வர் ஜான் வசந்த் வழங்கினார்.
இதற்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும்  ஆசிரியர்கள் ஸ்ரீதர்,கருப்பையா ,செல்வமீனாள் ,முத்துலெட்சுமி, ஆகியோர் செய்து இருந்தனர். பெற்றோர்கள் விலையில்லா பொருள்களை பெற்று சென்றனர்.

 
பட விளக்கம் :சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா பாட புத்தகங்கள்,நோட்டுகள் ,சீருடைகளை தேவகோட்டை ஆனந்தா கல்லூரி முதல்வர் ஜான் வசந்த் வழங்கினார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம்
மற்றும்  ஆசிரியர்கள் ஸ்ரீதர்,கருப்பையா ,செல்வமீனாள் ,முத்துலெட்சுமி,முத்தமீனாள் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை பள்ளி செய்து இருந்தனர்.

No comments:

Post a Comment