Monday 27 January 2020

 பரிசுகளை குவித்த மாணவர்கள் 

அழகாக மழலை மொழியில் தேவாரம் பாடி அசத்திய முதல் வகுப்பு மாணவி 
 
மாணவர்களுக்கு பாராட்டு








தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில் தேவாரம் ஒப்புவித்தல் போட்டிகளில் பரிசு பெற்ற மாணவர்களுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. 


                                                                  ஆசிரியை முத்து மீனாள்  வரவேற்றார்.விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்  .  தேவகோட்டை முத்தமிழ் வேத திருச்சபை சார்பில் நடைபெற்ற தேவாரம்   ஒப்புவிக்கும் போட்டியில் முதலிடம்  பெற்ற முத்தய்யன் , மெர்சி,ஐயப்பன்,இரண்டாமிடம் பெற்ற யோகேஸ்வரன்,தேவதர்ஷினி,ஈஸ்வரன்,மூன்றாமிடம் பிடித்த லெட்சுமி,வெங்கட்ராமன்,கிருத்திகா, சிறப்பு பரிசு பெற்ற முதல் வகுப்பு மாணவி ரதிபிரதா   உட்பட 43

மாணவர்களுக்கும்,  பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கும் பாராட்டு
தெரிவிக்கப்பட்டது. நிறைவாக ஆசிரியை  முத்துலெட்சுமி     நன்றி கூறினார்.



பட விளக்கம் :
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில் முத்தமிழ் வேத திருச்சபையின்   தேவாரம் ஒப்புவித்தல் போட்டியில்  பரிசு பெற்ற மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினார்கள்.

No comments:

Post a Comment