Wednesday 1 January 2020

 தொடர் கல்வி செய்தியாளர் விருது பெற்ற தலைமையாசிரியருக்கு பாராட்டு 




தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியருக்கு திசைகளின் தொடர் கல்வி செய்தியாளர் விருது வழங்கப்பட்டது.

                              புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி திசைகள் மாணவர் வழிகாட்டி அமைப்பு மூலமாக நடைபெறும் திசைகள் மின்னிதழ் பிரிவில் தொடர்ந்து கல்வி செய்திகளை வழங்கி வரும் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கத்துக்கு திசைகள் விருது வழங்கப்பட்டது . திசைகள் தலைவர் மருத்துவர்  தட்சிணாமூர்த்தி, பொருளாளர் முபாரக்,திசைகள் மின்னிதழின் ஆசிரியர் அண்ணாதுரை,உதவி ஆசிரியர் பூங்குன்றன் உட்பட திசைகள் குழுவினர் விருதினை  வழங்கினார்கள் .வாழ்க்கைக்கு அப்பால் உள்ள கல்வியையும் வழங்கி வரும் தலைமை ஆசிரியரைப் பாராட்டி இவ்விருது வழங்கப்பட்டது. இந்நிகழ்வில்  புதுக்கோட்டை மாவட்ட கவிஞர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள் , ஆசிரியர்கள், தாளாளர்கள்,மருத்துவர்கள் உட்பட பல்வேறு தரப்பட்ட பிரிவினரும் பங்கேற்றனர்.இவ்விருதினை பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரியின் முன்னாள் முதல்வர் சந்திரமோகன் தலைமை ஆசிரியருக்கு வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

 படவிளக்கம் :  தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கத்துக்கு க்கு அறந்தாங்கி திசைகள் மாணவர் வழிகாட்டி அமைப்பின் விருது வழங்கப்பட்டது .திசைகள் தலைவர் மருத்துவர்  தட்சிணாமூர்த்தி, பொருளாளர் முபாரக்,திசைகள் மின்னிதழின் ஆசிரியர் அண்ணாதுரை,உதவி ஆசிரியர் பூங்குன்றன் உட்பட திசைகள் குழுவினர் விருதினை  வழங்கினார்கள் .

No comments:

Post a Comment