Wednesday 2 October 2019

அன்பாகவும்,மரியாதையுடனும் பழகும் அகில இந்திய வானொலியின் நிலைய இயக்குனர் 


                                                  இரண்டு நாட்களுக்கு முன்பாக மதுரை அகில இந்திய வானொலி நிலையத்தில் நிலைய நிகழ்ச்சி தயாரிப்பாளர் பொன் .தனபாலன் அவர்களை சந்திக்க சென்றேன்.அப்போது நிலைய இயக்குனர் ஜோதிமணி அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.எங்களிடம் மிகவும் அன்பாகவும், தன்மையாகவும்,பாசத்துடனும் , நீண்ட நாள் பழகியது போன்று ஒருவருடன் பேசுவது போன்றும் பேசினார்கள்.மிக பெரிய பொறுப்பில் இருக்கும் அவர்கள் அதனை தனது பேச்சில் எங்குமே வெளிக்காட்டி கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.எங்களது பள்ளிக்கு . மாணவர்களுக்கு நல்ல விஷயங்கள் பலவற்றை என்னிடம் அன்புடன் பேசினார்கள்.அவர்களது அலுவலக பணியாளர்களிடமும் மிகவும் அன்புடன் பேசியதுடன் நன்றியும் சொன்னார்கள்.மத்திய அரசின் பணிகளில் மிகப்பெரிய பொறுப்பில் உள்ள ஒருவர் இவ்வளவு தாய்மை அன்புடன் எங்களிடமும்,மற்றவர்களிடமும் பேசியது மிகவும் மனதுக்கு பிடித்து இருந்தது.எங்களுக்கும் மகிழ்ச்சியாக இருந்தது.முன்பு ஒரு முறை சென்று இருந்தபோதும் இதே அன்புடன் ,தாய்மையுடன் பேசினார்கள்.தொடர்ந்து இது போன்று அன்னாரது பேச்சும்,செயலும் இருப்பது எங்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.அவர்களது பணி மென்மேலும் சிறக்க வேண்டுமென்று வாழ்த்துகிறோம்.நன்றி.
அன்புடன் ,
லெ .சொக்கலிங்கம் ,
தலைமை ஆசிரியர்,
சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,
தேவகோட்டை.
சிவகங்கை மாவட்டம்.

No comments:

Post a Comment