Tuesday 29 October 2019

சுர்ஜித்தின் மறைவுக்கு மாவட்ட ஆட்சி தலைவர் பள்ளி மாணவர்களுடன்  இரங்கல்




 

 தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சிவகங்கை மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் சுர்ஜித்துக்கு இரங்கல் கூட்டம் நடைபெற்றது.

                             ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சிறுவன் சுர்ஜித்தின் மறைவுக்கு மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.இந்நிகழ்வில் சிவகங்கை மாவட்ட ஆட்சி தலைவர் ஜெயகாந்தன்,தேவகோட்டை வட்டாட்சியர் மேசியா தாஸ்,பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் ,ஆசிரியர்கள் பெற்றோர்கள் பங்கேற்றனர்.சுர்ஜித்தின் மறைவுக்கு இரண்டு நிமிடம் மாணவர்கள்  மெழுகுவர்த்தி ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தினார்கள்.

 

படவிளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சிவகங்கை மாவட்ட ஆட்சி தலைவர் ஜெயகாந்தன் தலைமையில் சுர்ஜித்துக்கு இரங்கல் கூட்டம் நடைபெற்றது.இந்நிகழ்வில் தேவகோட்டை வட்டாட்சியர் மேசியா தாஸ்,பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் ,ஆசிரியர்கள் , பெற்றோர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.

No comments:

Post a Comment