கெட்டி மேளம்,நாதஸ்வர இசையுடன் பள்ளியில் சேரும் புதிய மாணவர்களை மாலையிட்டு ஊர்வலமாக அழைத்து வந்து
நெல்மணிகளில் "அ" கரம் எழுத வைத்தல் விழா நேரம் : காலை 7 மணி
இடம் : சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி வளாகம்,தேவகோட்டை.
நாள் : 08/10/2019
சிறப்பு விருந்தினர் : முனைவர் சபா .அருணாச்சலம் , தமிழ்த்துறை தலைவர் ( ஓய்வு ),ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி,தேவகோட்டை.
தொடர்புக்கு : லெ .சொக்கலிங்கம்,தலைமை ஆசிரியர்.8056240653
கல்விக் கண் திறப்பு விழா
விஜயதசமி விழாவினையொட்டி மாணவர் சேர்க்கை
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் புதிதாய் சேர்ந்த மாணவர்களை தேவகோட்டை முக்கிய வீதிகளின் வழியாக மாலையிட்டு பள்ளிக்கு அழைத்து வந்து பள்ளி ஆசிரியைகளால் நெல்மணிகளில் "அ"கரம் எழுத வைத்து மாணவர் சேர்க்கை கல்விக் கண் திறப்பு விழாவாக நடைபெற உள்ளது.
No comments:
Post a Comment