Friday 28 December 2018

 வண்ண களிமண்ணில் பல்வேறு உருவங்களை செய்து அசத்திய மாணவர்கள் 

வீடுகளில் மரம் வளர்த்தால் உங்கள் வாழ்க்கை சிறக்கும் 

தோட்டக்கலை அலுவலர் அறிவுரை 



விடுமுறை கால பயிற்சி முகாம் 












தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் செடி வளர்ப்பது தொடர்பான விழிப்புணர்வு   முகாம் நடைபெற்றது.பள்ளி ஆசிரியர் கருப்பையா   வரவேற்றார்.


                        பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.தேவகோட்டை அரசு தோட்டக்கலை பண்ணை அலுவலர் தர்மர் செடிகள் வளர்ப்பதால் ஏற்படும் நன்மைகளை மாணவர்களிடம் விளக்கினார். பயிற்சியில் பல்வேறு பள்ளிகளில் இருந்தும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.அகஸ்தியா நிறுவனத்தின் பயிற்சியாளர்கள் ராஜ்கமல்,அய்யப்பசாமி மாணவர்களுக்கு வண்ண களிமண்  உருவங்கள் தயாரிப்பது தொடர்பாக பயிற்சி அளித்தனர்.நிறைவாக ஆசிரியை முத்து மீனாள்  நன்றி கூறினார்.


பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில்  தேவகோட்டை அரசு தோட்டக்கலை பண்ணை அலுவலர் தர்மர் செடிகள் வளர்ப்பதால் ஏற்படும் நன்மைகளை மாணவர்களிடம் விளக்கினார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார் .வண்ண களிமண்  உருவங்களை மாணவர்கள் தயாரித்து அசத்தினார்கள்.




No comments:

Post a Comment