Thursday 27 December 2018

குறுக்கு சந்துகளிலிருந்து மெயின் சாலைக்கு  வரும்போது கவனம் அதிகம் தேவை

போக்குவரத்து போலீசார் அறிவுரை 

விடுமுறை கால பயிற்சி முகாம்






தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சாலை போக்குவரத்து விழிப்புணர்வு   முகாம் நடைபெற்றது.பள்ளி ஆசிரியை முத்துமீனாள்  வரவேற்றார்.


                        பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.தேவகோட்டை போக்குவரத்து தலைமை காவலர் கலா,காவலர்கள் ராஜ்குமார்,செந்தாமரை கண்ணன் ஆகியோர் மாணவர்களுக்கு சாலை போக்குவரத்து விழிப்புணர்வு தொடர்பாக செயல்முறைகளை செய்து காண்பித்தனர்.போக்குவரத்து விழிப்புணர்வு தொடர்பாக காரைக்குடி பிரான்சிஸ் அன்பரசு விளக்கினார். பயிற்சியில் பல்வேறு பள்ளிகளில் இருந்தும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.அகஸ்தியா நிறுவனத்தின் பயிற்சியாளர்கள் ராஜ்கமல்,அய்யப்பசாமி மாணவர்களுக்கு சார்ட்டில் பெயின்டிங் வரைதல் தொடர்பாக பயிற்சி அளித்தனர்.நிறைவாக ஆசிரியை முத்து லெட்சுமி நன்றி கூறினார்.


பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில்  தேவகோட்டை போக்குவரத்து தலைமை காவலர் கலா,காவலர்கள் ராஜ்குமார்,செந்தாமரை கண்ணன் ஆகியோர் மாணவர்களுக்கு சாலை போக்குவரத்து விழிப்புணர்வு தொடர்பாக செயல்முறைகளை செய்து காண்பித்தனர்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார் .

No comments:

Post a Comment