Friday 7 April 2023

 பள்ளியில் பெற்றோர், ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம்

நூலக புத்தகங்கள் படித்து கருத்துக்களை  கூறிய மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டிய பெற்றோர்கள் 











தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. 
                                        ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்றார். பள்ளியின் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம்  தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாணவர்கள் கல்வியிலும், ஒழுக்கத்திலும் சிறந்தவர்களாக விளங்க ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து செயல்பட வேண்டியதின் அவசியம் குறித்து பேசப்பட்டது. அந்தவகையில் ஆசிரியர்கள் கொடுக்கும் வீட்டு பாடங்களை மாணவர்கள் வீட்டில் செய்கிறார்களா? என்று பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் எடுத்து கூறப்பட்டது. பெற்றோர்கள் அடிக்கடி பள்ளிக்கு வந்து மாணவர்களின் செயல்பாடுகள் குறித்து வகுப்பு ஆசிரியர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது. இதில், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அதிகமான அளவில் மாணவர்களை போட்டி தேர்வுகளில் வெற்றி பெற வைத்ததற்கு பெற்றோர்கள் ஆசிரியர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்கள். புத்தங்கள் படித்து கருத்து கூறிய மாணவர்களுக்கு பெற்றோர்கள் பரிசுகளை வழங்கினார்கள்.நிறைவாக ஆசிரியை முத்துலெட்சுமி நன்றி கூறினார்.

படவிளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. புத்தங்கள் படித்து கருத்து கூறிய மாணவர்களுக்கு பெற்றோர்கள் பரிசுகளை வழங்கினார்கள்.










No comments:

Post a Comment