மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி
தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியின் சார்பாக மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
ஆசிரியர் ஸ்ரீதர் அனைவரையும் வரவேற்றார் . பள்ளி தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.தேவகோட்டை நகராட்சி சுகாதார ஆய்வாளர் மணிவண்ணன் மாணவர் சேர்க்கை பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். அரசு/அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிப்பதால் ஏற்படும் நன்மைகள் அனைத்தையும் மாணவர்கள் பட்டியலிட்டு கோசம் எழுப்பி முக்கிய வீதிகளின் வழியாக பேரணியை நடத்தினார்கள். அரசு வழங்கும் விலையில்லா பொருட்களான சீருடை, நோட்டு, புத்தகங்கள், கணித உபகரணப்பெட்டி, வண்ண கிரையான்கள், கலர் பென்சில்கள் என அனைத்தையும் மாணவர்கள் பட்டியலிட்டு முக்கிய வீதிகளின் வழியாக பேரணியாக சென்றார்கள். ஆசிரியை முத்துலட்சுமி நன்றி கூறினார். நகராட்சி சுகாதார மேற்பார்வையாளர் முருகேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.
பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியின் சார்பாக நடைபெற்ற மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணியை தேவகோட்டை நகராட்சி சுகாதார ஆய்வாளர் மணிவண்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.பள்ளி தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.
வீடியோ : https://www.youtube.com/watch?v=ElHH74WybPw
No comments:
Post a Comment