உலக புத்தக தின விழா
வாசிப்பை நேசிப்போம் - வாழ்க்கையில் வளம் பெறுவோம்
தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் உலக புத்தக தின விழா கொண்டாடப்பட்டது .
உலக புத்தக தின விழாவை முன்னிட்டு பள்ளி தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் மாணவர்களிடம் புத்தகங்கள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். அனைத்து மாணவர்களும் பங்கேற்ற பெருந்திரள் வாசிப்பு பள்ளியில் நடத்தப்பட்டது . வாசிப்பின் நன்மைகள் குறித்து விரிவாக மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. பள்ளியின் கோடை விடுமுறையிலும் மற்ற விடுமுறை நாட்களிலும் பாடப் புத்தகங்களோடு பள்ளி நூலக புத்தகங்களையும் அனைவரும் படிக்க வேண்டும் ,வாசிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. நூலக புத்தகங்களை வாசித்து பின்னூட்டம் வழங்கும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.ஆசிரியர் ஸ்ரீதர் நிகழ்வுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
பட விளக்கம்: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் உலக புத்தக தின விழாவையொட்டி புத்தக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மாணவர்களுக்கு பெருந்திரள் வாசிப்பு நடத்தப்பட்டு அதன் மூலமாக மாணவர்களுக்கு வாசிப்பின் முக்கியத்துவம் எடுத்துரைக்கப்பட்டது.
வீடியோ :
https://www.youtube.com/watch?v=p3HBYn4CzuE
https://www.youtube.com/watch?v=-WvxAEyTUOE
No comments:
Post a Comment