நிதி சார் கல்வி முகாம்
தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு கிராம வங்கி மற்றும் நபார்டு வங்கி சார்பில் நிதிசார் கல்வி முகாம் நடந்தது.
ஆசிரியை செல்வமீனாள் வரவேற்றார்.முகாமிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். தமிழ்நாடு கிராம வங்கியின் தேவகோட்டை கிளை மேலாளர் மதியழகன் ,செயல் மேலாளர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வங்கியின் சிவகங்கை மாவட்ட நிதி சார் கல்வி அலுவலர் பிச்சை மணி வங்கி சேவை, கடனுதவி, சேமிப்பு திட்டங்கள் குறித்து மாணவர்களுக்கு விளக்கினார். வங்கி அலுவலக உதவியாளர் பழனியப்பன் நன்றி கூறினார்.பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு கிராம வங்கி மற்றும் நபார்டு வங்கி சார்பில் நிதிசார் கல்வி முகாம் நடந்தது.பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
வீடியோ :
https://www.youtube.com/watch?v=Oqqj61BpqmU
No comments:
Post a Comment