Tuesday 23 November 2021

நேரில் பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறிய அறந்தாங்கி திசைகள் அமைப்புக்கு நன்றிகள் பல 

 


 





சமீபத்தில் எனது பிறந்த நாளுக்கு காரைக்குடிக்கு நேரில் வந்து வாழ்த்து தெரிவித்து, பள்ளி பணிகளை பாராட்டி மேலும்  சிறப்புடன் செயல்பட வாழ்த்துக்கள் தெரிவித்து பரிசுகள் வழங்கிய அறந்தாங்கி திசைகள் குழுவின் தலைவர் மருத்துவர் தெட்சிணாமூர்த்தி , பொருளாளர் முபாரக் , பொறியாளர் திருமதி.செல்வமனோகரி ஆகியோருக்கு நன்றிகள் பல.மருத்துவர் தட்சிணாமூர்த்தி அவர்கள் என்னிடம் பேசியபோது , பள்ளி பணிகளை மிக சிறப்பாக செயல்படுத்தி வருகிறீர்கள்.தொடர்ந்து தங்களின் செயல்பாடுகள் எங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.பல துறைகளில் உள்ள பலரும் ஆச்சரியத்தில் உள்ளனர் என்று வாழ்த்து தெரிவித்தார்.ஆண்டுதோறும் அறந்தாங்கியில் பிறந்த நாள் வாழ்த்து சிறிய அளவில் விழாவாக நிகழும். இந்த ஆண்டு காரைக்குடியில் உங்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்கிறோம் என்று கூறினார்.மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.நன்றிகள் பல.

அன்புடன் 

லெ .சொக்கலிங்கம்,

தலைமை ஆசிரியர்,

சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,

தேவகோட்டை. 

சிவகங்கை மாவட்டம்.


No comments:

Post a Comment