நீரோடை குளியல்
கருவியபட்டி நீரோடையில் குளியல்
காரைக்குடி- காரைக்குடி அருகே உள்ள கோட்டையூரில் இருந்து கண்டனூர் செல்லும் வழியில் உள்ள அழகாபுரி என்ற ஊரின் அருகே மிக அருமையான நீரோடை . குளியல் குளிக்கும் அளவிற்கு தண்ணீர் சென்று கொண்டு உள்ளது. ஓ .சிறுவயல், ஆத்தங்குடி போன்ற கண்மாய்களில் நீர் பெருகி இவ்வழியாக சென்று பாலையூர், புதுவயல் செல்லும் என்று அங்கு உள்ள ராமு என்பவர் தெரிவித்தார். கோட்டையூரில் இருந்து கண்டனூர் செல்லும் வழியில் அழகாபுரி ஊரின் நடுவில் கல்லாங்குடி சிவன் கோவில் தெரு என்கிற வழியாக சென்றால் கோவிலுக்கு பின்புறம் கருவியப்பட்டி ஊர் வருகிறது.அங்கு சென்றால் ஊரின் உள்ளே கண்ணுக்கு குளிர்ச்சியாக தண்ணீர் அருமையாக ஆர்ப்பரித்து ஓடுகிறது. உ ஏராளமான மக்கள் அங்குசென்று குளித்துக் மகிழ்ச்சியுடன் செல்கிறார்கள்.நீங்களும் ஒரு எட்டு சென்று வாருங்களேன் என்று நம்மிடம் தெரிவித்தார் காரைக்குடி லெ .சொக்கலிங்கம்.பல ஊர்களை தண்ணீரோ வழியாக இணைக்கும் நம் முன்னோர்களின் இந்த நீர் வழித்திட்டம் மிக அருமை உண்மை.
நீரோடையில் மகிழ்ச்சியுடன் டைவ் அடித்து குளிக்கும் காட்சி வீடியோவாக
https://www.youtube.com/watch?v=hEg2EZ547wk
No comments:
Post a Comment