Friday 18 January 2019

வாழ்வியல் திறன் பயிற்சி முகாம் 
 

வார்த்தை,செயல் இரண்டிலும் நேர்மை  வேண்டும் - மனிதவள பயிற்சியாளர் பேச்சு





தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் வாழ்வியல் திறன் பயிற்சி முகாம் நடைபெற்றது.
                                  ஆசிரியை முத்து மீனாள் வரவேற்றார்.தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.மதுரை நிகில் அறக்கட்டளை பயிற்சியாளர் குமார்  அகம் ஐந்து புறம் ஐந்து என்கிற தலைப்பில் நேர்மை  தொடர்பாக விளையாட்டு முறையில் செயல்பாடுகள் செய்து மாணவர்களுக்கும் ,ஆசிரியர்களுக்கும் புரியும் வகையில் விளக்கினார்.மாணவர்கள் காயத்ரி,சபரி,நித்திய கல்யாணி,கீர்த்தியா சிரேகா ,காவியா,அய்யப்பன் ,கார்த்திகேயன் ஆகியோர் நேர்மை தொடர்பாக தங்களின் கருத்துக்களை சொன்னார்கள்.நிறைவாக ஆசிரியை செல்வமீனாள் நன்றி கூறினார்.

பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மதுரை நிகில் அறக்கட்டளையை சார்ந்த குமார் நேர்மை என்கிற தலைப்பில்  வாழ்வியல் திறன் பயிற்சி அளித்தார்.தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.

No comments:

Post a Comment