Sunday 27 January 2019

 பகுதி -1 

திசைகள் குழுவுக்கு எனது வாழ்த்துக்கள் !

 
                                         நண்பர்களே சில மாதங்களுக்கு முன்பு புதுகை வரலாறு வாட்சப் குழுவில் என்னை (லெ .சொக்கலிங்கம்,தலைமை ஆசிரியர் ,சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி,தேவகோட்டை ,சிவகங்கை மாவட்டம் ) புதுகை வரலாறு நாளிதழ் திரு.சிவா அவர்கள் இணைத்தார்கள் .அதன் தொடர்ச்சியாக அந்த குழுவில் எனது பள்ளியின் பதிவுகளை வெளியிட்டு வந்தேன்.அப்போது திசைகள் குழுவின் மருத்துவர் திரு.தட்சிணாமூர்த்தி அவர்களின் அறிமுகம் கிடைத்தது.அவ்வப்போது எனது பதிவுகளுக்கு தொடர்ந்து அவர் வாழ்த்து தெரிவிப்பார்கள்.அதன் தொடர்ச்சியாக அவருடன் எனக்கு நட்பு ஏற்பட்டது.

திசைகள் குழுவுக்குள் வந்தது எப்படி?
                                                                கஜா புயல் பாதிப்புகளை பார்த்து எங்கள் பள்ளியின் சார்பாக கந்தவர்கோட்டை பகுதிக்கு உதவி செய்தோம்.(கந்தர்வகோட்டை ஆசிரியர் திரு.மணிகண்டன் அவர்களின் உதவியுடன் - அன்னார் திசைகள் குழுவில் இருக்கும் விவரம் எனக்கு அப்போது தெரியாது - அன்னார் எனக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்து பழக்கம் - தொலைபேசி வாயிலாக மட்டுமே- இன்னும் நேரில் அறிமுகம் இல்லை ). பிறகு அடுத்த உதவியாக அறந்தாங்கி அருகே உள்ள ஆவணம் செல்லும்போது வழி கேட்டு மருத்துவர் திரு.தட்சிணமூர்த்தி அவர்களிடம் பேசினேன்.நல்ல முறையில் எங்களுக்கு வழி சொல்லி உதவினார்கள்.அதன் பிறகு அவர்களே என்னிடம் பேசி திசைகள் குழுவில் எங்கள் பள்ளி செயல்பாடுகளை பதிவிட்டால் நன்றாக இருக்கும் என்று சொல்லி பாராட்டு தெரிவித்து என்னை இணைத்தார்கள் .

பல்வேறு சமுதாய விழிப்புணர்வு ஏற்படுத்தும் கலந்துரையாடல் நிகழும் இடம் திசைகள் குழு :
                                        பல்வேறு பதிவுகள் சமுதாய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.என்னால் அவற்றை ஆர்வத்துடன் படிக்க மட்டுமே இயலும்.அதற்கு பின்னுட்டம் இட இயலாத பணி சுமையில் இருப்பேன்.இருந்தபோதிலும் பெரும்பாலான பதிவுகளை படித்து விடுவேன்.வாழ்த்துக்கள்.

சமீபத்தில் மருத்துவர் திரு.வெங்கடேஷ் அவர்களுடன் ஒரு கலந்துரையாடல் :                                                                 ஜாக்டோ - ஜியோ போராட்டம் தொடர்பாக பல்வேறு தகவல்களை பதிவிட்ட சமயம் தோழர் வெங்கேடஷ் அவர்கள் அதற்கு பின்னுட்டம் நல்ல  முறையில் கொடுத்தார்கள்.காலை 6.15 மணிக்கு அன்னாருடன் பேசியபோது பல்வேறு பொருளாதார பிரச்சனைகள் குறித்து என்னிடம் பேசி,போராட்டம் வெற்றி பெற வாழ்த்து சொன்னார்கள்.

நன்றி.
லெ .சொக்கலிங்கம்,
தலைமை ஆசிரியர் ,சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி,தேவகோட்டை ,சிவகங்கை மாவட்டம்.
 CELL :09786113160.



இதன் தொடர்ச்சி பகுதி இரண்டாக விரைவில்
                                






No comments:

Post a Comment