Monday 7 December 2015

                      கழிவிலிருந்து செல்வம் கண்காட்சி

தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருள்களில் வீனாவதிலிருந்து செலவு எதுவும் இல்லாமல் நல்ல பொருள்கள் தயாரித்து  பயன்படுத்தும் கண்காட்சி நடைபெற்றது.



                           கண்காட்சிக்கு வந்தவர்களை மாணவர் ஜெகதீஸ்வரன் வரவேற்றார்.தேவகோட்டை சரக உதவி தொடக்க கல்வி அலுவலர் லெட்சுமி தேவி  கண்காட்சியை தொடக்கி வைத்து தலைமை தாங்கி பேசுகையில் , மாணவர்கள் அனைவரும் நமக்கு தேவை இல்லமால் உபயோகபடாமல் உள்ள பொருள்களில் இருந்து நல்ல பொருள்களாக மாற்றி நன்றாக கொண்டு வந்துள்ளீர்கள்.நமக்கு தேவை இல்லை என நினைக்கும் பொருள்கள் நமக்கு பல வழிகளில் பயன்படுவதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்  என பேசினார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ . சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார்..1ம் வகுப்பில் மாணவி திவ்யஸ்ரீ தென்னங்குச்சி,தெர்மோகோல் கொண்டு கிளி கூண்டு ,சுத்தியல்,துப்பாக்கி ஆகியவற்றையும் , 2ம் வகுப்பு மாணவன் வெங்கட்ராமன் தேங்காய் மூடி,பட்டன் கொண்டு ஆந்தையும்,மூன்றாம் வகுப்பு மாணவி ஜனஸ்ரீ அரச இல்லை கொண்டு யானை உருவமும், 4ம் வகுப்பு மாணவி வள்ளியம்மை தண்ணீர் டப்பாவில் தராசும் ,5ம் வகுப்பு காயத்ரி முட்டை கூடு  கொண்டு பூங்கொத்து,பொம்மை ஆகியவற்றையும் ,6ம் வகுப்பு மாணவன் சஞ்சய் தண்ணீர் டப்பாவில் பூங்கொத்தும்,7ம் வகுப்பு மாணவி எழுதும் மேசையை காலன்டர் அட்டை கொண்டும்,8ம் வகுப்பு மாணவி அட்டை ,குச்சிகள் கொண்டு தபால் பெட்டியும் செய்து முதல் பரிசினை பெற்றனர்.கண்காட்சியில் 100க்கும் மேற்பட்ட பொருள்க்களை செய்து கொண்டு வந்தனர்.ஆசிரியை முத்து லெட்சுமி, முத்து மீனாள் ,வாசுகி ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர்.நிறைவாக மாணவி சக்தி நன்றி கூறினார்.

பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் கழிவிலிருந்து செல்வம் கண்காட்சியை  தேவகோட்டை உதவி தொடக்க கல்வி அலுவலர் லெட்சுமி தேவி துவக்கி வைத்து பார்வையிட்டார்.

No comments:

Post a Comment