Wednesday 2 December 2015

      மாற்று திறனாளிகளை ஊக்க படுத்துங்கள்  

கல்லூரி பேராசிரியை பேச்சு                                   

 சர்வதேச மாற்று திறனாளிகள் தினம் 

தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சர்வதேச மாற்று திறனாளிகள் தின நிகழ்ச்சி நடைபெற்றது.





                                      நிகழ்ச்சிக்கு வந்தவர்களை ஆசிரியை வாசுகி வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி தாவரவியல் துறை பேராசிரியையும்,நாட்டு நலப் பணி திட்ட அலுவலருமான  வீரலட்சுமி  சிறப்புரை வழங்கி பேசுகையில் , மாணவர்களாகிய நீங்கள் அனைவரும் மாற்று திறனாளிகளுக்கு உதவ வேண்டும்.மாற்று திறனாளிகள் பல பேர் வாழ்க்கையில் பல எண்ணற்ற சாதனைகளை படைத்து உள்ளனர்.மாணவர்களாகிய நீங்கள் சிறு வயதிலேயே மாற்று திறனாளிகளை நல்ல எண்ணத்துடன் அணுகி அவர்களுக்கு உதவி செய்து ஊக்கபடுத்த வேண்டும் என கேட்டு கொண்டார்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி நாட்டு நலப்பணி திட்டதினர் செய்து இருந்தனர்.மாணவர்கள் ராஜேஷ்,முனீஸ்வரன்,மாணவிகள் சௌமியா ,ராஜேஸ்வரி,பரமேஸ்வரி உட்பட பலர் இனி வரும் காலங்களில் மாற்று திறனாளிகள் அனைவரையும் ஊக்க படுத்தி உதவி செய்வோம் என பேசினார்கள்.நிறைவாக ஆசிரியை வாசுகி நன்றி கூறினார்.

பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சர்வதேச மாற்று திறனாளிகள் தினம் தொடர்பாக  ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியை வீரலெட்சுமி பேசினார்.உடன் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம்.

No comments:

Post a Comment