Thursday, 29 May 2025

 கட்டில் செய்வது எப்படி?



                    நண்பர்களே புதியதாக கட்டில் செய்வதற்காக முயற்சிகள் எடுத்தேன். அப்பொழுது பல நண்பர்களும் கட்டில் புதிதாக கடையில் வாங்கி விடுங்கள். அதுதான் எளிதானது என்று கூறினார்கள்.

                                     நானும் கடையில் சென்று விசாரித்தேன்.காரைக்குடியில்  கட்டில் நேரடியாக செய்யும் மரக்கடை சந்தில் உள்ள கடையில் சென்று விசாரித்தேன். அவர் கூறிய தொகையும், கட்டிலும் விலையும் சரியாகத்தான்  இருந்தது.

                                       இருந்தபோதிலும் எனக்கு நான் கட்டில் நாமே  மரம் வாங்கி செய்து விட்டால் நன்றாக இருக்குமே என்று எண்ணினேன். அதனடிப்படையில் ஆசாரிகள் சிலரை விசாரித்து ஒரு ஆசாரியை வரவழைத்து  எனக்கு கட்டில் செய்வதற்கு மரம் வாங்கி வந்தேன்.

                                     கனஅடி 3200 ரூபாய் என்று எனக்குக் கொடுத்தார்கள். ஆனால் மரத்தை விட டக்ஸ் தொகைதான் அதிமாக இருந்தது.அப்புறம் அவர்களிடம் பேரம் பேசி விலையை சிறிதளவு குறைத்தேன்.        

                         கன அடியும் 3000 ரூபாய்க்கு கேட்டேன். முதலில் மறுத்து அவர்கள் பின்பு தருவதற்கு ஒத்துக்கொண்டார்கள். 

                             நானே நேரில் சென்று மரங்களை வாங்கி ரயில்வே ரோடு பகுதியில் இருக்கும் பட்டறையில் மரங்களை இழைத்து  கொண்டு வந்தேன்.

                                  பிறகு கடைசல் போடுவதற்கு காரைக்குடியில் கட்டில் கால்கள் கடைசல் போடுவதற்கு காரைக்குடியில் முத்தாலம்மன் கோவில் அருகில் சத்யம் தியேட்டரின் பின்புறம் உள்ளவரிடம் கட்டில்கால் கடைசல் போட்டேன்.

                             கோட்டையூரில் இருக்கக்கூடிய ஆசாரி பட்டறையில் குச்சிகளை 4 இஞ்சி கடைசல் போட்டு 6 இன்ச்  அளவில் அழகாக குச்சிகள் செய்து கொண்டேன்.

                             கட்டில்  பலகைகளை சாதாரணமாகத்தான் நாங்கள் போட கூறினோம். ஏனென்றால் கட்டிலில் அழுக்குகள் படியும் என்பதால் டிசைன் வேண்டாம் என்று மறுத்து விட்டோம். 

                          ஆனால் எங்களது ஆசாரியை அவர்களோ அவருடைய சிந்தனையில் என்ன தோன்றியதோ அதை போன்று எங்களிடம் வேலைகளை வாங்கி அதுபோன்ற கட்டிலை செய்துவிட்டார்.

                          ஆனால் நாங்களோ கட்டில் வெறுமனே டிசைன் இல்லாமல் இருந்தால் போதும் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வந்தோம்.

                        எனவே இரண்டாவதாக செய்யும் கட்டிலை  டிசைன் இல்லாமல்  செய்யலாம் என்று முடிவு செய்தோம் . கட்டில் 7 அடியில் நீளமும் 6 அடி அகலமும் இருப்பது போன்று செய்தால் மிகவும் நன்றாக இருக்கும் என்று பலரும் கூறினார்கள்.

                              அதன் அடிப்படையிலேயே நாங்கள் முயற்சி செய்தோம்.  அவ்வளவு எளிதாக அந்த சைசில் மரம் அளவுகள் கிடைக்கவில்லை.பிளைவுட் அளவுகளும் கிடைக்கவில்லை.

                           6க்கு 3, 6க்கு 4 என்கிற சைஸ்களில் தான் பிளைவுட்  கிடைத்தது. அவ்வாறு கிடைக்கப்பெற்ற பிளைவுட்களை  கொண்டு வந்து நான்கு நாட்கள் ஆசாரிகள் வேலை செய்து அதன் மூலமாக கட்டிலை தயார் செய்தோம். 6 ஆட்கள்  வேலை செய்தார்கள்.

                                       அதாவது ஒரு ஆசாரி இரண்டு நாட்களும், இரண்டு ஆசாரி இரண்டு நாட்களும் ஆக மொத்தம் 6 ஆட்கள் கணக்கில் வேலை முடித்தோம்.                               

                                            பிறகு இரண்டாவதாக செய்யக்கூடிய கட்டிலை எந்தவிதமான டிசைனும் இல்லாமல் வெறும் கட்டை  மட்டும் கொடுத்து செய்யச் சொல்லி கூறியிருந்தோம். அவ்வாறே செய்து கொடுத்தார்கள்.

                                  எனவே கட்டில்  செய்வது என்பது ஆசாரிகள் கிடைத்து விட்டால் மிகவும் எளிதானதாக தான் இருக்கின்றது. இழைப்பது , கடைசல் போடுவது என்பது தான் கொஞ்சம் சிரமமான காரியம்.

                                    அதுவும் நமக்கு கடை தெரியும் பொழுது எந்தவிதமான சிரமமும் இல்லை. டிசைன் இல்லாமல் நாம் போடும் பொழுது கடைசல் இல்லாமல் நாம் போடலாம். கடைசல் தேவையில்லை.

                              அது வேறு தனியாக பணம் செலவு ஆகிறது. எனவே மிகவும் குறைவான விலையில் சிறப்பான முறையில் செய்வதற்கு டிசைன்கள் இல்லாமல் மிக எளிதாக செய்து கொள்ளலாம்.                  

                                       மரத்தை வாங்கும்பொழுது அங்கிருந்து நாம் கடைக்குச் சென்று, அப்போதே  இளைப்பு பட்டறை நோக்கி சென்று, இளைத்து விட்டு அப்படியே பிளைவுட்டையும் எடுத்து வாங்கி   வைத்துக்கொண்டு அதையும்  ஏற்றிக்கொண்டு ஒரே வாகனம் வந்துவிட்டால் மிக எளிதாக கட்டில் செய்துவிடலாம்.

                           டைனிங் டேபிளும் அதே போன்று  செய்யலாம். ஆறுக்கு நான்கு என்கிற டைனிங் டேபிளை 3 அடி உயரத்தில்  நாம் செய்துகொள்ளலாம்.

                            எனவே கட்டில் செய்வது என்பது நமது திருப்திக்கும், நமது விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து கொள்ள முடிகின்றது, 

                                   பலரும் வேலைக்கு ஆள் கிடைக்காது. ஒழுங்காக வேலை பார்க்க மாட்டார்கள் என்று எதிர்மறை தகவலை தந்தனர். 

                     ஆனால் உண்மையில் கொஞ்சம் மெனக்கெடல் இருந்தால் நல்ல ஆசாரி கிடைப்பார். நல்ல முறையில் மரங்களும் வாங்கலாம். பாலிஷ் போடுவதும் ஈசிதான் .

நன்றி.

  லட்சுமணன் 

காரைக்குடி 













No comments:

Post a Comment