சமுதாயத்தோடு இணைந்த கல்வி வழங்கும் பள்ளி
தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு சமுதாயத்துடன் இணைந்த கல்வியை வழங்கி வருவதற்கு பெற்றோர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இப்பள்ளியில் தொடர்ந்து மாணவர்களுக்கும், மாணவர்கள் மூலமாக பொதுமக்களுக்கும், பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலங்கள் சென்று, கோஷங்கள் எழுப்பி பல்வேறு சமுதாயம் தொடர்பான விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
போக்சோ சட்டம் குறித்து பள்ளியில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் :
மாவட்ட குழந்தைகள் நல அலுவலரை அழைத்து வந்து யாரேனும் உங்களை கேலி செய்தால் 1098யை அழையுங்கள் என்பது உட்பட பல்வேறு விழிப்புணர்வு தகவல்களை எடுத்துரைக்க செய்தோம். இதன் மூலம் பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் தொடக்கூடாத இடங்களில் யார் தொட்டாலும் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து நல கல்வி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
வட்ட சட்ட விழிப்புணர்வு முகாம்
வீதிகளில் சென்று நிழல் இல்லாத நாள் விழிப்புணர்வு ஏறப்டுத்துதல் :
நிழல் இல்லாத நாள் என்பது மிக முக்கியமான ஒரு அறிவியல் விழிப்புணர்வு ஆகும். இந்த அறிவியல் விழிப்புணர்வை பொதுமக்கள் அனைவரும் பயன்படும் வகையில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளிலேயே மாணவர்கள் சிறு சிறு குழுக்களாக பிரிந்து ஆங்காங்கே சென்று நிழல் இல்லாத நாளை சரியான நேரத்தில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களுக்கு அது தொடர்பான அறிவியல் உண்மைகளை விளக்கி சமுதாயத்தோடு இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்திக் வருகின்றனர் .
உணவில் கலப்படம் கண்டறிதல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
உணவு பொருள்களில் உள்ள கலப்படங்களை கண்டறிதல் எப்படி என்பது தொடர்பான விழிப்புணர்வை மாணவர்களுக்கு எளிதாக புரியுமாறு விளக்கி கூறப்பட்டது..வண்ணங்கள் கலந்த உணவுகளை சாப்பிட வேண்டாம்.காலாவதியான பொருள்களை கண்டுபிடித்து தவிர்த்து விடுங்கள். உணவு கலப்படம் தொடர்பாக புகார்களை 9444042322 என்கிற எண்ணிற்கு கட்செவி மூலம் அனுப்பலாம் என்றும் தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.நேரடியாக செயல் முறைகள் மூலம் விளக்கப்பட்டது.
குறைந்த செலவில் கலப்பிடமில்லாத சோப் பவுடர் , சோப் ஆயில் தயாரிக்கும் பயிற்சி
பச்சை,மஞ்சள்,ரோஸ் கலர்களில் பினாயில் உற்பத்தி செய்து பெற்றோர்கள் அசத்தினார்கள்.பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தின் மூலம் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பினாயில் ,சோப் பவுடர், சோப் ஆயில் தயாரித்தல் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த மையத்தின் மூலம் வழங்கப்படும் இலவச பயிற்சிகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தொற்றா நோய் மற்றும் மாதவிடாய் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.இதில் பள்ளியில் 6,7,8ம் வகுப்பு மாணவிகளுக்கு இளம் வயதில் ஏற்படும் உடல் ரீதியான பிரச்சினைகள் குறித்தும்,வரும் காலங்களில் நோய்களில் இருந்து தற்காத்து கொள்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.மாணவிகளுக்கு இலவச மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
சமுதாயத்தில் காவலர்களின் பங்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல்
நமது வாழ்வில் ஒரு பிரச்சனையோ, வாக்குவாதமோ அல்லது மோதல் ஏற்படும் சூழ்நிலையில் உடனே போலீசைக் கூப்பிடவா? இல்லை நீ போலீசுக்கு போன் பண்ணு என சொல்வது வழக்கம். நாடு முழுவதும் காவல் துறையினர் சட்டம் ஒழுங்கு குற்றத்தடுப்பு மற்றும் குற்றம் கண்டுபிடித்தல் ஆகிய அவசியமான பணிகளில் இரவு பகல் பாராமல் உழைத்து சமூகத்தில் அமைதியை காத்து வருகின்றனர்.வருடாவருடம் உள்ளூர் காவல், உள்நாட்டு காவல்,. எல்லை காவல் படை உள்ளிட்ட பல காவல் பணிகளில் உயிர் தியாகம் செய்தவர்களைப் போற்றும் வகையில் காவலர் நினைவு தினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது என்கிற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு
குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாப்பது, பொது இடங்களில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாலியல் ரீதியாக ஏற்படும் தொல்லைகள், படிப்பை பாதியில் நிறுத்திய குழந்தைகள் மீண்டும் படிப்பைத் தொடர்வது ,பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
ஏதேனும் அவசர உதவியை பெற பள்ளி மாணவ மாணவிகள் 181, 1098 , 1930 ஆகிய கட்டணமில்லா உதவி எண்களை தொடர்பு கொள்ளலாம். இதனை தொடர்ந்து பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நமக்கு தெரியாமல் நம்மை ஏமாற்றி போடப்படும் ஒப்பந்தங்களோ, வெற்று தாளில் வாங்கப்படும் கையழுத்துக்களோ செல்லாது.நம் உரிமைகள் மறுக்கப்படும்போது கேட்டு பெறுவதே சட்டம் .மாற்று திறனாளிகளின் வாகனங்களுக்கு சுங்க சாவடிகளில் கட்டணம் விளக்கு என்பது போன்று பல்வேறு சட்ட நுணக்கங்கள் மாணவர்களுக்கு வட்ட சட்ட பணிகளின் வழக்குரைஞர் மூலமாக பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் விளக்கப்பட்டது.
பெற்றோர்கள் பாராட்டு :
இதுபோன்று சமுதாயத்திற்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், அதன் மூலமாக மாணவர்களுக்கு பிற்காலத்தில் சமுதாயமாக மாறும் போது தற்போதைய விழிப்புணர்வு உதவும் வகையிலும் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகள் ஏற்படுத்த பட்டு வருவது குறித்து பெற்றோர்கள் பள்ளிக்கு பாராட்டு தெரிவித்து உள்ளனர்.
படவிளக்கம்: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு தொடர்ந்து சமுதாயத்தோடு இணைந்த கல்வியை பள்ளி வழங்கி வருவதற்கு பெற்றோர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
No comments:
Post a Comment