கூலி தொழிலாளி மகள் சாதனை
மாநில அளவிலான போட்டி தேர்வில் வெற்றி பெற்று சாதனை
தேசிய வருவாய் வழிதிறன் தேர்வில் வெற்றி பெற்றதால் ரூபாய் 48,000 கிடைக்கும்
தேவக்கோட்டை- தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வில் தேவக்கோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலை பள்ளி மாணவி வெற்றி பெற்று சாதனை படைத்தார்.தொடர்ந்து பல ஆண்டுகளாக இப்பள்ளி மாணவர்கள் இத்தேர்வில் வெற்றி பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வு தமிழ்நாடு முழுவதும் உள்ள மேல்நிலை,உயர்நிலை ,நடுநிலைப் பள்ளிகளில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்தது.இன்று தேர்வு முடிவுகள் வெளியானது.தேர்வில் வெற்றிபெறும் மாணவ மாணவியர்க்கு அவர்களின் பெயரில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் சேமிப்பு கணக்கு துவங்கி அதன் வாயிலாக ஒவ்வொரு மாதமும் ஆயிரம் ரூபாய் வீதம் நான்கு ஆண்டுகளுக்கு 48 ஆயிரம் ரூபாய் கல்வி உதவித் தொகையாக மத்திய அரசின் நிதியிலிருந்து மாநில அரசு செலுத்துகிறது.தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இத்தேர்வில் பங்கேற்றனர்.இந்த ஆண்டு
மாநில அளவில் நடைபெற்ற இந்த தேர்வில் 6695 மாணவர்கள் மட்டுமே அரசின் ஊக்கத்தொகை பெற தகுதியானவர்கள்.. சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலை பள்ளியின் மாணவி தீபா வெற்றி பெற்று தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார் . மாணவியி ன் பெற்றோர் கூலி வேலைக்கு செல்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வெற்றி பெற்ற மாணவியை பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் பள்ளி ஆசிரியைகள் முத்துலெட்சுமி, முத்து மீனாள்,டெனிஷா மற்றும் மாணவியின் பெற்றோர் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
இது குறித்து வெற்றி பெற்ற மாணவி தீபா கூறுகையில் ,நான் வெற்றி பெற்றது மிகவும் பெருமையாக இருக்கிறது.எனது வெற்றிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ,ஆசிரியர்கள்,எனது பெற்றோர்கள் விடா முயற்சியே காரணம்,அவர்களுக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன் . எனது அப்பா கூலி தொழில் செய்து என்னையையும்,என் அக்காவையும் படிக்க வைத்து வருகின்றார். பள்ளி விடுமுறையிலும் , முக்கிய பண்டிகை நேரத்திலும் எனது வீட்டுக்கே வந்து பள்ளி ஆசிரியர்கள் வழங்கிய தொடர் சிறப்பு பயிற்சியின் காரணமாகாவே நான் வெற்றி பெற்றுள்ளேன்.என்று கூறினார்.
இந்த மாணவி படிப்பில் திறமையாக இருப்பதுடன் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று இதுவரை எண்ணற்ற சான்றிதழ்களும்,பல பரிசும் பெற்றுளளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 10ம் வகுப்பு,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு முடிவுகள் வெளியாவது போன்று 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்ததேர்வு முடிவுகள் முக்கியமானது.நடுநிலைப்பள்ளி அளவில் இப்பள்ளியில் பயின்ற மாணவர்களில் கடந்த சில ஆண்டுகளில் இருபதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் என்.எம்.எம்.எஸ்.தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலை பள்ளியின் மாணவி தீபா மாநில அளவில் நடைபெற்ற தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வில் வெற்றி பெற்றார் . மாணவிக்கு தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.உடன் வெற்றி பெற்ற மாணவியின் பெற்றோர் மற்றும் ஆசிரியைகள் உள்ளனர் .
வீடியோ : https://www.youtube.com/watch?v=ri_udsJLiz4
No comments:
Post a Comment