Monday 7 December 2020

குழந்தைகளுக்கான கதை சொல்லுதல் போட்டி 

இணையத்தில் கதை சொல்லி கலக்கிய மாணவர்கள்









தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு இணையம் வழியாக குழந்தைகளுக்கான கதை சொல்லுதல் போட்டி நடைபெற்றது. போட்டியில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றார்கள் 

                                  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில்  ஆளுமை திறனை  வளர்க்கும் வகையில் வாரந்தோறும் மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கி வருவது  வழக்கம். தற்போது கொரோனாவால் பள்ளி  மாணவர்கள் வீட்டிலேயே முடங்கி கிடப்பதை கருத்தில் கொண்டு  மாணவர்கள் வீட்டிலேயே ஓவியம் வரைய சொல்லியும்,கவிதை மற்றும் பேச்சு போட்டிகளில் பங்கேற்ற   மாணவர்களை ஆன்லைன் வழியாக வீடியோவாக அனுப்ப சொல்லி பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் ஸ்ரீதர்,முத்துமீனாள் ,செல்வமீனாள் ,முத்துலெட்சுமி ஆகியோர் அலைபேசி மூலம் மாணவர்களை தொடர்பு கொண்டு   ஊக்குவித்து வருகின்றனர் . மாணவர்கள் தொடர்ந்து வீட்டில் இருந்தபடியே இது போன்ற போட்டிகளில் பங்கேற்க செய்வது அவர்களது உடல்நலம் மற்றும் மனநலத்துக்கு  உதவுவது ஆகும் . இணையம் வழியாக மாணவர்களுக்கான கதை சொல்லுதல் போட்டி நடைபெற்றது.போட்டியில் பங்கேற்ற மாணவர்கள் திவ்யஸ்ரீ,தேவதர்ஷினி,மெர்சி,சொர்ணமேகா,ஹரிப்ரியா,திவ்யா,

யோகேஸ்வரன்.அட்சயா,ஈஸ்வரன்,கனிஷ்கா,முத்தய்யன்,மகாலெட்சுமி,

நதியா,ஹரிஹரசுதன் ,சபரி ஆகியோர் நல்ல கருத்துக்களை தெரிவித்ததற்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.பள்ளி திறந்த பிறகு போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.இப்பள்ளி மாணவர்களுக்கு  ஆன்லைன் வழியாக  பாட  வகுப்புகளும், பல்வேறு மத்திய,மாநில அரசுகள் நடத்தும் ஆன்லைன் போட்டிகளில் மாணவர்களை பங்கேற்க வைப்பதும்  , சதுரங்க பயிற்சிகள்  நடைபெற்று வருவதும் , இணையம் வழியாக நடைபெற்ற சட்டமன்ற பணிகள் குழுவின் பட்டிமன்றத்தில் பங்கேற்று பரிசுகள் பெற்றதும் ஊரடங்கு காலத்தில் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கும் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது என்று பெற்றோர்கள்  தெரிவித்தனர்.அழகாக இளம் வயது மாணவர்கள் அழகாக கதை சொல்வதை வீடியோவாக https://www.youtube.com/channel/UCHzPL6BgK53S4JaIEs9bqKg?view_as=subscriber யூ டியூப் தளத்தில் காணலாம் .


பட விளக்கம் :சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு இணையம் வழியாக குழந்தைகளுக்கான கதை சொல்லுதல் போட்டிகளில் பங்கு கொண்டு ஆன்லைன் மூலம் வீடியோக்களை அனுப்பினார்கள்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் ஸ்ரீதர்,முத்தமீனாள் ,செல்வமீனாள் ,முத்துலெட்சுமி ஆகியோர் மாணவர்களை போட்டிகளில் பங்கேற்க ஊக்குவித்தனர். 

 

கதை சொல்லுதல் நிகழ்வை வீடியோவாக காணலாம் :

 
https://www.youtube.com/watch?v=JTtFhgQXSkA

https://www.youtube.com/watch?v=K1RN17oeZRU

https://www.youtube.com/watch?v=6aOI69Zpwrs

https://www.youtube.com/watch?v=BuCWZ4Xk7jU

https://www.youtube.com/watch?v=7oqbJwb5NSY
https://www.youtube.com/watch?v=LR0FEvnDNbM

https://www.youtube.com/watch?v=eUnciNjFGkg

https://www.youtube.com/watch?v=Eid_1onQ4B8

https://www.youtube.com/watch?v=rbE2rFYs5PY

https://www.youtube.com/watch?v=Qu6v4ViA-5k

https://www.youtube.com/watch?v=rVmxazq1x9c

https://www.youtube.com/watch?v=0lG3YFp950U

https://www.youtube.com/watch?v=ia-rrMOtjBY

https://www.youtube.com/watch?v=3YY-11LKDDg

https://www.youtube.com/watch?v=92syK1NV6-k

 


No comments:

Post a Comment