Monday 25 July 2016

                        பள்ளி அளவிலான சதுரங்க போட்டி

தேவகோட்டை -ஜூலை- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் பள்ளி அளவிலான சதுரங்கப் போட்டிகள் நடைபெற்றது.





சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் பள்ளி அளவிலான சதுரங்கப் போட்டிகளை பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தொடங்கி வைத்தார்.நடுநிலைப் பள்ளி அளவில் இரண்டு பிரிவில் போட்டிகள் நடைபெற்றன.இதனில் 11 வயதுக்கு உட்பட்டவர்கள் பிரிவில் ஆண்கள் பிரிவில் 6ம் வகுப்பை சேர்ந்த மாணவர் கார்த்திகேயன்  முதலிடத்தையும், அதே  வகுப்பு மாணவர் சஞ்சீவ்  இரண்டாம் இடத்தையும் , பெண்கள் பிரிவில் 6 வகுப்பு மாணவி காயத்ரி முதல் இடத்தையும் ,அதே வகுப்பை சார்ந்த மாணவி நித்திய கல்யாணி இரண்டாம் இடத்தையும் பிடித்து வெற்றிபெற்றனர்.
14 வயதுக்கு உட்பட்டவர்கள் பிரிவில் ஆண்களுக்கான பிரிவில்  8ம்   வகுப்பு மாணவர் ஜீவா முதல் இடத்தையும் ,அதே  வகுப்பை சேர்ந்த மாணவர் ராஜேஷ்  இரண்டாம் இடத்தையும் ,பெண்களுக்கான பிரிவில் 8ம்  வகுப்பு மாணவி தனலெட்சுமி முதல் இடத்தையும், அதே வகுப்பை சார்ந்த ராஜேஸ்வரி  இரண்டாம் இடத்தையும் பிடித்து வெற்றிபெற்றனர்.போட்டிக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் கருப்பையா செய்திருந்தார்.வட்டார அளவில் நடைபெறும் போட்டிகளுக்கு இவர்கள் தகுதி பெற்றவர்கள் ஆவார்கள்.

பட விளக்கம்: தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் சதுரங்க போட்டிகள் நடைபெற்றன.

No comments:

Post a Comment