Monday 16 May 2016

                                              மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா 

தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் விடுமுறை எடுக்காமல் பள்ளிக்கு அனைத்து நாட்களும் வருகை புரிந்த மாணவி உட்பட மன்றத்தில் பல்வேறு செயல்பாடுகள் செய்த மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.



                                                விழாவிற்கு வந்திருந்தவர்களை பள்ளி மாணவி திவ்ய ஸ்ரீ வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார் . விடுமுறை எடுக்காமல் பள்ளிக்கு அனைத்து நாட்களும் வருகை புரிந்த 8ம் வகுப்பு மாணவி தனம் பாராட்டும்,பரிசும் பெற்றார்.பசுமை படை உட்பட பல்வேறு மன்றங்களில் செயல்பாடுகள் செய்த யோகேஸ்வரன்,முனீஸ்வரன்,ஜெகதீஸ்வரன் ,ஜீவா,ராஜேஷ்,ரஞ்சித்,ஹரிஹரன்,விக்னேஷ்,ராஜலெட்சுமி ,பரமேஸ்வரி, காவியா பிரவீனா ,ஜெனிபர் ,பூவதி,முத்தழகி,ஸ்ருதி ,கண்ணதாசன்,முகிலரசன் உட்பட பல்வேறு மாணவர்கள் பரிசு பெற்றனர்.வினாடி வினா கரும்பலகையில் எழுதியதை அனைத்து நாட்களும் எழுதிய  8ம் வகுப்பு கண்ணதாசனுக்கும் , பொன் மொழி தினசரி கரும்பலகையில் எழுதிய சுமித்ராவுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.மாணவி தனலெட்சுமி நன்றி கூறினார்.

பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் விடுமுறை எடுக்காமல் பள்ளிக்கு அனைத்து நாட்களும் வருகை புரிந்த மாணவி உட்பட மன்றத்தில் பல்வேறு செயல்பாடுகள் செய்த மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.
                                     

No comments:

Post a Comment