Tuesday 17 May 2016

மாநில அளவிலான காற்றலை ஆற்றல் போட்டிகளில் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்பு

தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் மாநில அளவில் நடைபெற்ற காற்றாலை ஆற்றல் தொடர்பான கட்டுரை ,கவிதை போட்டிகளில் பங்குபெற்றனர்.



                                       மாநில அளவில் காற்றாலை ஆற்றல் தொடர்பாக காற்றாலை ஆற்றல் அதன் முக்கியத்துவம் என்கிற தலைப்பில் கட்டுரை போட்டியும் ,காற்றாலை ஆற்றல் அதன் எதிர்காலம் என்கிற தலைப்பில் கவிதை போட்டியும் நடைபெற்றது.இதனில் கவிதை போட்டியில் ரஞ்சித்,நந்தகுமார்,ராஜேஸ்வரி,தனலெட்சுமி,கண்ணதாசன் ஆகியோரும்,கட்டுரை போட்டியில் உமா மகேஸ்வரி,பார்கவி லலிதா,கார்த்திகா,ஆகாஷ் குமார்,யோகேஸ்வரன்,முனீஸ்வரன் ஆகியோரும் பங்கேற்றனர்.அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதள்களை பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் வழங்கி பாரட்டினார்.பயற்சி அளித்த ஆசிரியை முத்து மீனாள் ,ஆசிரியர் ஸ்ரீதர் ஆகியோர்க்கும் வாழ்த்து தெரிவிக்கபட்டது .

பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் மாநில அளவில் நடைபெற்ற காற்றாலை ஆற்றல் தொடர்பான கட்டுரை ,கவிதை போட்டிகளில் பங்குபெற்றனர்.பங்கேற்பு சான்றிதழ்களுடன் பள்ளி மாணவர்கள் உள்ளனர்.
                             

No comments:

Post a Comment