Monday 31 July 2023

இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. சி-56 ராக்கெட் வெற்றிக்கு பள்ளி மாணவர்கள் பாராட்டு

 


 

தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ)  பி.எஸ்.எல்.வி. சி-56 ராக்கெட் மூலம் சிங்கப்பூர் நாட்டு செயற்கைக் கோள்களை  வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு வண்ண பலுன்கள்  பறக்கவிட்டு மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

                                                 இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகள் மூலம் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. காலநிலை கண்காணிப்பு, பேரிடர் மேலாண்மை, தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் மற்றும் வணிக ரீதியில் வெளிநாட்டு செயற்கைக்கோள்களும் விண்ணில் ஏவப்படுகிறது.

                 அந்த வகையில் சிங்கப்பூரை சேர்ந்த 360 கிலோ எடை கொண்ட 'டிஎஸ் - சாட்' என்ற பிரதான செயற்கைக்கோள் 530 கிலோமீட்டர் உயரத்தில் சுற்றுவட்ட பாதையில் நிலை நிறுத்திய பின்னர் அடுத்தடுத்த ஆறு சிறிய செயற்கைக்கோள்களும் சுற்றுவட்ட பாதைக்கு அனுப்பப்பட்டன.

                          இந்த 'டிஎஸ்- சாட்' செயற்கைக்கோள் 'இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ்' செயற்கை துளை ரேடார் கருவியை கொண்டுள்ளது. எனவே அனைத்து வானிலை தகவல்களையும், துல்லியமான படங்களையும் வழங்கும் என்கிற தகவலை  பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மாணவர்களுக்கு  எடுத்து கூறினார்.இந்த சாதனையை செய்த இஸ்ரோவின் அனைத்து விஞ்ஞானிகள்,பொறியாளர்கள்,தொழில்நுட்ப ஊழியர்கள் அனைவருக்கும் பள்ளி மாணவர்களால் வண்ண பலூன் பறக்கவிடப்பட்டு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ஸ்ரீதர், முத்துலெட்சுமி  ஆகியோர் செய்து இருந்தனர்.



பட விளக்கம்: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி. சி-56 ராக்கெட் மூலம்
அனைத்து வானிலை தகவல்களையும், துல்லியமான படங்களையும் வழங்கும்  செயற்கைக் கோள்களை  வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு வண்ண பலுன்கள்  பறக்கவிட்டு மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

 

No comments:

Post a Comment