Tuesday 11 July 2023

சந்திரயான் - 3 வெற்றி பெற வாழ்த்துகள்

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு 11 வயது சிறுமி   கடிதம்

 



 

 தேவகோட்டை -  சந்திரயான் - 3 திட்டமிட்டபடி, நிலவில் தரை இறங்க வாழ்த்துகள் கூறி 11 வயது சிறுமி , இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு கடிதம் எழுதி உள்ளது, சமூக வலைதளங்களில், பாராட்டுகளை பெற்று வருகிறது.

                இஸ்ரோவால் வருகின்ற ஜூலை 14ம் தேதி சந்திராயன் -3 விண்ணில் செலுத்தப்பட உள்ளது.இந்நிலையில், இஸ்ரோ விஞ்ஞானிகளை ஊக்கப்படுத்தும் வகையில், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் 7ம் வகுப்பு பயிலும்  கனிஸ்கா   என்ற, 11 வயது சிறுமி , இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தன் கைப்பட கடிதம் ஒன்றை எழுதி உள்ளாள் . இந்த கடிதத்தை, பள்ளி தலைமை ஆசிரியர் , 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில் பகிர்ந்தார்.

அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: மதிப்பிற்கும், மரியாதைக்குரிய இஸ்ரோவின் தலைவர் எஸ்.சோம்நாத் சார் அவர்களுக்கு, வணக்கம்.என் பெயர் ம.கனிஸ்கா . நான் தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறேன்.கடந்த வாரம் செய்தித்தாளில் சந்திரியான் - 3 செயற்கைகோள் ஜூலை 14 தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ளதாக உள்ள செய்தியை படித்தேன்.சந்திரியான் - 3 விண்ணில் வெற்றிகரமாக செல்ல என்னுடைய வாழ்த்துகள்.இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ள இஸ்ரோ தலைவர் உள்ளிட்ட  அனைவருக்கும் எங்களது பள்ளியின் சார்பாக பாராட்டுகள்.இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமூக வலைதளத்தில், பகிரப்பட்ட இந்த கடிதம், பல்வேறு தரப்பில் இருந்தும், பாராட்டுக்களை குவித்து வருகிறது.
                                          

No comments:

Post a Comment