Monday 27 March 2023

 காலத்தை போற்றுங்கள் 

முன்னாள் தலைமை ஆசிரியர் பேச்சு

 

திருஇடைமருதூர் ,திருபுறவம் பாடல் ஒப்புவித்தல் போட்டி

 பரிசுகள் வழங்கும் விழா








தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில் திருஇடைமருதூர் ,திருபுறவம்,திருவிருக்குறள்,திருநெடுங்களம்,திருமுதுகுன்றம்  பாடல்கள் ஒப்புவித்தல் போட்டி  நடைபெற்றது.
                                       ஆசிரியை செல்வமீனாள்  வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினர் . ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரும், தேவகோட்டை முத்தமிழ் வேத திருச்சபை  துணை செயலருமான ஆதி ரெத்தினதினம் மாணவ,மாணவிகளுக்கு போட்டிகள் நடத்தி புத்தக பரிசு வழங்கி பேசுகையில் , மாணவர்கள் இளம் வயதில் காலத்தை போற்றுங்கள்.இன்று காலை 5 மணிக்கு படிக்க ஆரம்பித்தால் , வாழ்க்கை முழுதும் அதே நேரத்துக்கு எழுந்திருக்க வேண்டும்.அப்போதுதான் வாழ்க்கையில் வெற்றி பெற இயலும்என்று பேசினார்.நிறைவாக ஆசிரியை முத்து லெட்சுமி  நன்றி கூறினார்.
                     
பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில் திருஇடைமருதூர் ,திருபுறவம்,,திருவிருக்குறள்,திருநெடுங்களம்,திருமுதுகுன்றம்  பாடல்கள் ஒப்புவித்தல் போட்டிகள் நடைபெற்றது.வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரும், தேவகோட்டை முத்தமிழ் வேத திருச்சபை  துணை செயலருமான ஆதி ரெத்தினதினம் புத்தகங்களை பரிசாக வழங்கினார்.
பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினர் . 


வீடியோ : https://www.youtube.com/watch?v=erd5WGgJHxU

No comments:

Post a Comment