நல்லோர் வட்டம் சான்றிதழ் பெற்று அசத்திய பள்ளி மாணவர்கள்
வள்ளுவர் விழா சான்றிதழ்களை தேவகோட்டை கோட்டாட்சியர் வழங்கினார்
தேவகோட்டை- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு நல்லோர் வட்டம் சான்றிதழ்களை தேவகோட்டை கோட்டாட்சியர் சுரேந்திரன் வழங்கினார்.
ஆசிரியை முத்துலட்சுமி வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார் . நல்லோர் வட்டம் நடத்திய போட்டிகளில் பங்குபெற்றதற்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு தேவகோட்டை கோட்டாட்சியர் சுரேந்திரன் தலைமையில் நடைபெற்றது. அவர் பேசுகையில் , நேர்மையாக,உண்மையாக இருங்கள்.வாழ்க்கையில் எளிதாக வெற்றி பெறலாம்.கடின உழைப்பு மட்டுமே நமது இலக்கை அடைய வழி வகுக்கும்.அனைவரும் குறிக்கோளை அமைத்து கொள்ளுங்கள். தொடர்ந்து நல்ல வாய்ப்புகளை பயன்படுத்தி உங்கள் இலக்கை அடையுங்கள் .இவ்வாறு பேசினார்.இணையம் வழியாக நடைபெற்ற குறள் ஒப்புவித்தல் போட்டியில் பங்கேற்ற மாணவர்கள் மாலினி,யோகேஸ்வரன்,முத்தய்யன் ,திவ்யஸ்ரீ ,ஹேமலதா,அம்முஸ்ரீ,நதியா,கனிகா ,கனிஷ்கா,தேவதர்ஷினி,வெங்கட்ராமன்,ஈஸ்வரன்,ஜோயல் ரொனால்ட்,கீர்த்தியா,ஹரிப்ரியா,சொர்ணமேகா,மகாலெட்சுமி ஆகியோருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. நிகழ்வுக்கான ஏற்பாடுகளை ஆசிரியை முத்துமீனாள், ஸ்ரீதர் ஆகியோர் செய்திருந்தனர். ஆசிரியை செல்வமீனாள் நன்றி கூறினார்.
படவிளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் நல்லோர் வட்டம் சான்றிதழ்கள் வழங்கும் விழா தேவகோட்டை கோட்டாட்சியர் சுரேந்திரன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார்.
கோட்டாட்சியர் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு வீடியோவாக
https://www.youtube.com/watch?v=ed0lPbCd0LU
No comments:
Post a Comment