Sunday 21 February 2021

 ஊருக்கு செல்லும்போதெல்லாம் யார் இனிமேல் உதவி செய்வார்கள்? 

உடல் தானம் வழங்கிய RM.R ஐயா  அவர்களுக்கும்,  அனுமதி அளித்த குடும்பத்தாருக்கும் வாழ்த்துக்கள் . 

       


           வேகுப்பட்டிக்கு செல்லும் பொழுதெல்லாம் RM.R ஐயா அவர்களை சந்தித்து பேசாமல் வருவதில்லை. ஒவ்வொரு முறை செல்லும்போதும் அவர்கள் அன்புடன்  நம்முடன் பேசி பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொள்வார்கள். அவர்களுடைய வயது முதிர்வின் ஆசீர்வாதம் நமக்குக் கிடைப்பதெல்லாம் மிகப்பெரிய வரப்பிரசாதம். ஊரில் உள்ள அனைவருக்கும் எல்லா விழாக்களுக்கும் ,நம் குடும்ப நிகழ்வுகளுக்கும் அவர்களை தொடர்பு கொண்டால்  தொலைபேசி மூலமே அனைத்து ஏற்பாடுகளையும்  செய்து உதவுவார்கள். விழா அன்று காலையில் நாம் சென்றால் அனைத்தும் நல்ல விதமாக நடந்துவிடும். அந்த அளவிற்கு  பல்வேறு விஷயங்களில் நமக்கு எடுத்து சொல்லி அன்புடன்  ராமநாதன் அய்யா அவர்கள் உதவிகரமாக இருந்தார்கள். அவர்களது இழப்பு  ஊருக்கே மிகப்பெரிய இழப்பு என்பது தான் உண்மை. மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு பயன்படும் வகையில்
ஐயா அவர்கள் தனது உடலையும் தானமாக வழங்கியது மிகப்பெரிய ஒரு செயலாகும். அதற்கு அவர்களது குடும்பத்தார்கள் அனுமதி அளித்ததற்கு வாழ்த்துக்கள்.  ஊருக்குச் செல்லும் பொழுதெல்லாம் ஐயா அவர்கள் பல்வேறு விதங்களில் நமக்கு தகவலை தெரிவித்து உதவுவார்கள். அவர்களது ஆன்மா இறையுருள் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

 ஆழ்ந்த வருத்தங்களுடன் 

லெ . சொக்கலிங்கம்,  வேகுப்பட்டி

 

 

 

 

No comments:

Post a Comment