Wednesday 25 October 2017

கந்தர் சஷ்டி விழாவில்  கலை நிகழ்ச்சிகளால் கலக்கிய பள்ளி 

தேவகோட்டை - தேவகோட்டை கந்தர் சஷ்டி விழாவில் சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியின் கலை நிகழ்ச்சிகள் கண்கவர் நிகழ்ச்சியாக மிக பெரிய மேடையில் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் நடைபெற்றது.



       72 ஆம் ஆண்டாக நடைபெற்று வரும் தேவகோட்டை கந்தர் சஷ்டி விழாவில் மிகப்பெரிய மேடையில் சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்  பள்ளியின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.பள்ளி செயலரும்,கந்தசஷ்டி கழக தலைவருமான அரு .சோமசுந்தரம் தலைமை தாங்கினார். ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் கலை நிகழ்ச்சிகள்
வரவேற்புரையுடன் துவங்கி பரதநாட்டியம் , செல்ல குழந்தைகள் நடனம்,லார்ட் தண்டபாணி ஆங்கில பேச்சு ,ஒயிலாட்டம் நடனம்,சுழலும் சொல்லரங்கம் ,மழலைகளின் ஆசை பாடல் நடனம்,லார்ட் சுப்ரமணியன் ஆங்கில பேச்சு,காவடி ஆட்டம் நடனம்,மழைத்துளி நடனம்,உடலுக்கு நன்மை தரும் யோகா,தீப நடனம் ஆகிய கலை நிகழ்ச்சிகள் நன்றியுரையுடன் நிறைவுபெற்றது.ஒரு மணி நேரத்திற்கும் மேலான கலை நிகழ்ச்சிகளை பள்ளி மாணவிகள் 5ம் வகுப்பு கீர்த்தியா ,7ம் வகுப்பு சந்தியா ஆகியோர் தொகுத்து வழங்கியது குறிப்பிடத்தக்கது.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் உள்ளிட்ட ஆசிரியர் குழுவினர்  கலை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து இருந்தனர்.


பட விளக்கம் : தேவகோட்டை கந்தர் சஷ்டி விழாவில் சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியின் கலை நிகழ்ச்சிகள் கண்கவர் நிகழ்ச்சியாக மிக பெரிய மேடையில் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் நடைபெற்றது.

No comments:

Post a Comment