Friday 13 October 2017

 பட் ,பட் படார் ,
 டம் ,டம் ,டமார் 

 பாதுகாப்பாக பட்டாசுகளை  வெடிப்பது எப்படி ?


 
பாதுகாப்பான  தீபாவளி கொண்டாடுவது எப்படி? 


தீயணைப்பு  அதிகாரி நேரடி  செயல் முறை விளக்கம் 


வெடி வெடிப்பதை  குறைத்து  மாசுபடுவதை குறையுங்கள் 

 

      தேவகோட்டை -  தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவது எப்படி? பட்டாசுகளை வெடிப்பது எப்படி? என தேவகோட்டை   தீயணைப்பு  அதிகாரி பள்ளி மாணவர்களுக்கு  நேரடி செயல் முறை விளக்கம் அளித்தார்.

       நேரடி செயல் விளக்கத்திற்கு வந்தவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் வரவேற்றார்  . பள்ளி செயலர் அரு .சோமசுந்தரம் நிகழ்விற்கு தலைமை தாங்கினார்.இதில்   தேவகோட்டை தீயணைப்பு நிலைய அதிகாரி ஆறுமுகம்  மாணவர்களிடம் பேசுகையில் , பட்டாசு வெடிக்கும் போது தீ விபத்து ஏற்பட்டால் எப்படி தீயை அணைக்க வேண்டும்?  எனவும் ,பேரிடர் மேலாண்மை , மீட்புப்பணிகள் பற்றிய செயல் விளக்கம் எப்படி  என்பதையும் விளக்கி சொன்னார். நிகழ்வின் தொடர்ச்சியாக பள்ளி மாணவ-மாணவிகளுக்கு    தேவகோட்டை  தீயணைப்பு நிலையத்தை சார்ந்த முன்னனி தீயணைப்போர் ராஜவேல், தீயனைப்போர் இளங்கோவன்,தங்கராஜ்,வசந்தகுமார்,ராமர்,பாண்டியராஜன் ,ஆறுமுகம் ஆகியோர்   விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள்.மாணவர்களின் பெற்றோர்கள் பெருமளவில் 
 கலந்து கொண்டு செயல் விளக்கத்தை  நேரில் பார்த்து பயன் பெற்றனர்.

                                   நிகழ்ச்சியில் ஜெனிபர் ,உமா மஹேஸ்வரி,ரஞ்சித்,அஜய் பிரகாஷ்,நந்தகுமார் ,காயத்ரி,வெங்கட்ராமன்,கோட்டையன் ,சஞ்சய் மற்றும் நித்யகல்யாணி உட்பட பல மாணவ,மாணவியர் கேள்விகள் கேட்டு பதில் பெற்றனர்.மாணவ,மாணவியர் இனி வரும் தீபாவளி பண்டிகை அனைத்தையும் பாதுகாப்பான தீபாவளி பண்டிகையாக கொண்டாடுவோம் என உறுதி எடுத்து கொண்டனர்.நிறைவாக ஆசிரியை முத்து லெட்சுமி நன்றி கூறினார். 




பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவது எப்படி? என தேவகோட்டை   தீயணைப்பு  அதிகாரி ஆறுமுகம்   பள்ளி மாணவர்களுக்கு நேரடி செயல் விளக்கமளித்தார்.உடன் பள்ளி செயலர் அரு .சோமசுந்தரம்உள்ளார்




மேலும் விரிவாக :



பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவது தொடர்பாக தீயணைப்பு அதிகாரி     மேலும் கூறியதாவது : 

**வெடி ,வெடி வெடிப்பதால் நமக்கு ஒன்றும் நன்மை கிடையாது.வெடி வெடித்தோம் என்று வேண்டுமானால் மகிழ்ச்சி அடையாளம்.ஆனால் வெடி,வெடிப்பதால் தீமைகள் அதிகம் ஏற்படுகிறது.நாம் செல்லமாக வளர்க்கும் பூனை,நாய் போன்ற வளர்ப்பு பிராணிகளும்,நம் வீட்டில் உள்ள முதியவர்களும் வெடி சத்தத்தால் மிகவும் பாதிப்பு அடைவார்கள்.சிட்டு குருவிகள் அதிகம் பாதிக்கப்படும். இறுகிய உடைகளை போட்டு  கொண்டு வெடி வெடிக்க வேண்டும் என்பதை தெளிவாக எடுத்து கூறினார்.  

🔁🔁தீ பிடித்து விட்டால் வாளி தண்ணீரை அப்படியே  ஊற்றாமல் கப்பில் அள்ளி தெளிக்க வேண்டும். மஞ்சள் அரைத்து அல்லது மஞ்சள் தூள் தடவ வேண்டும்.புஷ்வணம் ,வெடி ஆகிய அனைத்திலும் ஒரே மருந்துதான் பயன்படுத்தபடுகிறது. புஷ்வாணத்தில் வெடி மருந்து கொஞ்சம் தளர்வாகவும்,வெடியில் வெடி மருந்தை அதிக இறுக்கமாகவும் பேப்பரில் அடைத்து வைப்பார்கள்.இதுதான் வெடிக்கும் சத்தத்தின் அளவை மாற்றுகிறது.பாம்பு மாத்திரை அதிக மாசு அசுத்தத்தை ஏற்படுத்தும் என்றும்,அதனை தவிர்க்குமாறும் அறிவுரை வழங்கினார்.

** வெடிகளை வெடிக்கும்போது அதன் மேல் வெள்ளையாக உள்ள திரியை லேசாக பிய்த்துவிட்டு  பிறகு நீண்ட ஊதுபத்தியை கொண்டு ,தள்ளி நின்று கொண்டு அந்த திரியில் பத்தவைக்கும்போது ஓரளவு பாதுகாப்பாக வெடிக்கலாம்.ஆனால் வெடிக்காமல் இருப்பது என்பது நமது பணத்திற்கும் நல்லது.சுற்றுப்புற சூழல் மாசுபடாமல் இருப்பதற்கும் நன்மை பயக்கும் என்றார்.

* பாட்டாசுகளை கொளுத்தும்போது தளர்வான ஆடைகளை உடுத்துவதை தவிருங்கள் .டெரிகாட்டன்,டெர்லின் ஆகிய எளிதில் தீப்பற்றக்கூடிய ஆடைகளை கண்டிப்பாக அணியக் கூடாது.

பாதுகாப்பான தீபாவளி தொடர்பான பொதுவான தகவல்கள்

* மூடிய பெட்டிகள் ,பாட்டில்களில் பட்டாசுகளை உள்ளிட்டு கொளுத்தி வெடிக்கக் கூடாது.மருத்துவமனைக்கு அருகில் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது.

*விலங்குகளை துன்புறுத்தும் வகையிலும் அவை பயப்படும் வகையிலும் பட்டாசுகளை வெடிக்கக்கூடாது.அதிக சத்தம் கொண்ட பட்டாசுகளை வெடிக்க வேண்டாம்.ஏனெனில் அது உடலையும்,மனநிலையும் பாதிக்கும்.காதுகளை செவிடாக்கும்.பட்டாசுகளை கொளுத்தி கையில் வைத்து கொண்டோ உடலுக்கு அருகிலோ வெடிக்க வேண்டாம்.மாறாக பாதுகாப்பான தொலைவில் வைத்தே வெடிக்க வேண்டும்.

   FIRE விளக்கம்

                           FIRE என்பதில் F என்கிற எழுத்துக்கு  தீயை கண்டுபிடி,I  என்ற  எழுத்துக்கு தீயை தெரியபடுத்துதல் ,R என்ற எழுத்துக்கு தீயில் இருந்து காப்பாற்றுதல், E என்ற எழுத்துக்கு தீயில் இருந்து வெளி ஏறுதல் என்கிற விளக்கத்தை கொடுத்தார்.
 மாணவர்கள் வெடி வெடிக்கும்போது அம்மா ,அப்பாவை பக்கத்தில்  வைத்துகொண்டு வெடிக்கவும்.வெடிக்காத வெடியை  கையில்  எடுக்க கூடாது  .


தீ விபத்தை A,B,C,D,E என வகை படுத்துகின்றனர்.A என்பது எரிந்து சாம்பலாகி தண்ணீர் ஊற்றி அணைப்பது ஆகும்.B  என்பது ஆவியாகி எண்ணெயில் பட்டு தீ பிடிப்பது ஆகும்.இதனை.மணல் போட்டு  அணைத்தல் வேண்டும்.

 ராக்கெட்  வெடி வாங்க வேண்டாம்.குப்பைகளை பக்கத்தில் போட்டு வெடிக்க வேண்டாம்.



No comments:

Post a Comment