Sunday 2 April 2017

கவிதை போட்டியில் சிறப்பு பரிசு பெற்ற நான்காம் வகுப்பு மாணவிக்கு
பள்ளியில் பாராட்டு 

தனியார் பள்ளி மாணவர்களுடன் போட்டியிட்டு வெற்றி பெற்ற அரசு உதவி பெறும் பள்ளி மாணவிக்கு பாராட்டு

தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும்  நடுநிலைப் பள்ளியில் கவிதை போட்டியில் சிறப்பு பரிசு பெற்ற மாணவிக்கு பாராட்டு விழா நடைபெற்றது.


                                             விழாவிற்கு வந்தவர்களை பள்ளி ஆசிரியை செல்வமீனாள் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.காரைக்குடியில் நடைபெற்ற முடியரசனார் கவிதைகள் தொடர்பான போட்டிகளில் பங்கு பெற்று சிறப்பு பரிசு வென்ற நான்காம் வகுப்பு மாணவி கிருத்திகாவிற்கும் ,பங்கு பெற்று சான்றிதழ் பெற்ற சபரி ,ராஜேஷ்,தனலெட்சுமி ஆகியோருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.நிறைவாக ஆசிரியை சாந்தி நன்றி கூறினார்.

பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும்  நடுநிலைப் பள்ளியில் கவிதை போட்டியில் சிறப்பு பரிசு பெற்ற மாணவிக்கு பாராட்டு விழா நடைபெற்றது.பரிசு மற்றும் சான்றிதழ்களுடன் மாணவர்கள் உள்ளனர்.

No comments:

Post a Comment