Tuesday 6 September 2016

எல் .ஐ.சி.சார்பில் பள்ளியில் சிறந்த மாணவர்களுக்கான விருது வழங்கும் விழா 

   தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் எல் .ஐ.சி.சார்பில் பள்ளியில் சிறந்த மாணவர்களுக்கான விருது வழங்கும் விழா நடைபெற்றது.


                         விழாவிற்கு வந்திருந்தோரை ஆசிரியை முத்து லெட்சுமி வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார் . தேவகோட்டை எல்.ஐ.சி.கிளை மேலாளர் மோகன சுந்தரம் மாணவர்களுக்கு விருதுகளையும்,சான்றிதழ்களையும் வழங்கி எல்.ஐ .சி.வைரவிழா கொண்டாடுவதை குறித்து சிறப்புரையாற்றினார்.கிளையின் வளர்ச்சி அதிகாரி தமிழரசு முன்னிலை வகித்தார்.இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் தொடர்பாக ராஜீ என்ற மாணவியும்,எல்.ஐ .சி .யின் செய்லபாடுகள் மற்றும் பயன்பாடுகள் பற்றி மாணவிகள் தனலெட்சுமியும்,பரமேஸ்வரியும் ,காப்பீட்டின் பயன்கள் தொடர்பாக உமாமஹேஸ்வரியும் பேசினார்கள்.முத்தய்யன் ,ஆகாஷ்,தேவதர்ஷினி,ஈஸ்வரன்,அஜய் பிரகாஷ்,சஞ்சீவ்,ஜெனிபர்,கார்த்திகா ,பார்கவி லலிதா ,பரத்குமார் ஆகிய 10 மாணவர்களுக்கு விருதுகளும்,சான்றிதழ்களும் எல்.ஐ .சி.யின் சார்பாக வழங்கப்பட்டன.ஏராளமான பெற்றோர்களும் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.

பட விளக்கம் :  தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் எல் .ஐ.சி.சார்பில் பள்ளியில் சிறந்த மாணவர்களுக்கான விருது வழங்கும் விழா நடைபெற்றது.விழாவில் விருதினை வழங்கிய கிளை மேலாளர் மோஹன சுந்தரம்,வளர்ச்சி அதிகாரி தமிழரசு,பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் உள்ளனர்.

No comments:

Post a Comment