Friday 8 April 2016


பள்ளி மாணவர்கள் அனைவருக்கும்

விருது வழங்கும் விழா

தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும்  நடுநிலைப் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் விருது வழங்கும் விழா நடைபெற்றது.


                                                     விழாவிற்கு வந்தவர்களை ஆசிரியை முத்துலெட்சுமி வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். கமுதி நம்மாழ்வார் வேளாண்மை கல்லூரி தாளாளர் அஹ்மத் யாசின் முன்னிலை வகித்தார்.விசாலயன்கோட்டை சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரி தாளாளர் சேது குமணன் சிறப்புரை வழங்கி பேசுகையில் , 8ம் வகுப்பு மாணவி தனம் மற்றும் 7ம் வகுப்பு மாணவி தனலெட்சுமி ஆகியோரின் கல்வியின் சிறப்புகளை பாராட்டி, உயர் கல்வி வரையிலான படிப்பு செலவை தான் முழுவதுமாக ஏற்று கொள்வதாக உறுதி அளித்தார். பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களுக்கும் அவரது கல்லூரியில் மரம் நட்டதை பாராட்டி விருது வழங்கினார்.விழாவில் எராளமான பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.விழாவில் விருதை பெற்றுக்கொண்டு பேசிய மாணவிகள் தனலெட்சுமி,தனம்,ராஜேஸ்வரி,பரமேஸ்வரி,ஜெயஸ்ரீ மற்றும் மாணவர்கள் யோகேஸ்வரன்,கண்ணதாசன்,முனீஸ்வரன்,ஜெகதீஸ்வரன்,ராஜேஷ் ஆகியோர் நடுநிலைப் பள்ளியில்  படிக்கும்போதே விருது பெற்றது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும்,அனைவருக்கும் விருது கிடைத்துள்ளது மிகுந்த சந்தோசத்தை தருவதாகவும் தெரிவித்தனர்.விழாவினை ஆசிரியை செல்வ மீனாள் தொகுத்து வழங்கினார்.ஆசிரியை சாந்தி நன்றி கூறினார்.அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி அளவில் அனைத்து மாணவர்களுக்கும் விருது வழங்கப்பட்டது அளவு கடந்த மகிழ்ச்சியை தருவதாக பெற்றோர்கள் பேசினார்கள்.


பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள் அனைவருக்கும் சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரி தாளாளர் சேது குமணன் விருது வழங்கினார்.விருது பெற்ற பள்ளி மாணவர்களுடன் நம்மாழ்வார் வேளாண்மை கல்லூரி தாளாளர் அஹமத் யாசின் ,பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் உள்ளனர்.

No comments:

Post a Comment