Saturday 6 February 2016

 தேவாரம்   ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா





தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும்  பள்ளியில் தேவாரம் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
                                    பாராட்டு விழாவில் ஆசிரியை முத்து மீனாள் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார் . தேவாரம் ஒப்புவித்தல் போட்டியில் பங்கேற்ற மாணவர்களில்  6 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள  பிரிவில்  8ம் வகுப்பு  மாணவி  ராஜேஸ்வரி    முதல்  பரிசையும், 7ம் வகுப்பு மாணவி  தனலெட்சுமி  மற்றும் 6ம் வகுப்பு   மாணவர்  ரஞ்சித்  ஆகிய இருவரும் இரண்டாம் பரிசையும், பெற்றனர். 3ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை உள்ள பிரவில் 5ம் வகுப்பு மாணவர்  கார்த்திகேயன்  இரண்டாம் பரிசையும், 3ம் வகுப்பு  மாணவி கீர்த்திகா மூன்றாம்    பரிசையும், 4ம் வகுப்பு  மாணவர் அஜய் பிரகாஷ் ஆறுதல் பரிசையும், பெற்றனர்..இவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரிய,ஆசிரியைகள் பாராட்டு தெரிவித்து வாழ்த்தினார்கள். தேவாரம் பாடல்களும் விழாவில் பாடப்பட்டது. நிறைவாக ஆசிரியை  முத்து லெட்சுமி நன்றி கூறினார்.

பட விளக்கம் ; தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தேவாரம் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ,மாணவியர் பரிசு பொருள்களுடன் உள்ளனர்.

No comments:

Post a Comment