Wednesday 24 February 2016

உயிர் விகாசம் அடைந்தால் உடல் நோயில்லாமல்  இருக்கும் 
வாழ்வியல் பயிற்றுனர் பேச்சு 

நாம் அனைவரும் இப்போது இருக்கும் திறமையை போல் இன்னும் 14 மடங்கு அதிகமாக உழைக்கும் திறமையை பெற்றவர்கள்
வாழ்வியல் பயிற்றுனர் பேச்சு 

நாம் துருப்பிடிச்சு அழிவதை விட தேய்ந்து அழிவது நன்று.
 வாழ்வியல் பயிற்றுனர் பேச்சு


தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர்களுக்கான கற்பித்தல் எளிது என்கிற ஆளுமை  பயிற்சி முகாம் நடைபெற்றது.




                                        பயிற்சிக்கு வந்திருந்தோரை ஆசிரியை முத்து லெட்சுமி வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை  கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் சந்திர மோகன் , பேராசிரியர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மதுரை வாழ்வியல் பயிற்றுனர் விஸ்வநாதன் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்து பேசும்போது ,  ஆசிரியர்கள் அனைவரும் எப்போதும் எளிதாக நல்ல உடல் நலத்துடனும் , மன நலத்துடனும்  இருக்கலாம்.நீங்கள் முதலில் மாணவர்களுக்கு புரிவது மாதிரி சொல்லி கொடுங்கள்.நாம் பிறந்தது முதல் கேட்க மட்டுமே பழகி உள்ளோம்.வார்த்தைகளால் சொல்வதை காதால் மட்டும் கேட்காமல் வார்த்தைகளால் சொல்வதை தாண்டி   கண்ணால் ,மூளையால் ,இதயத்தால் புரிந்துகொண்டால் சொல்வது நன்றாக புரியும்.நாம் சொல்வது விரிவாக இருந்தால் கேட்பவர்  மனம் சொல்வதை ஏற்கவில்லை என்றால் அடுத்தவர் சொல்லும் தகவல் நமக்கு கேட்க கூடாது என்று தானாகவே கத்தியை காது  எடுத்துகொள்ளும்.

                                 மூச்சுதான் நமது வாழ்கையை நிர்ணயக்கிறது.பிடிக்காத வேலையை செய்தால் மூச்சு ஈரமாக இருக்கும். உடல் பாதுகாப்பாக இருக்கிறது.உயிர் விகாசமாக இருந்தால் தான் வாழ்கையில் மகிழ்ச்சி கிடைக்கும்.நாம் அனைவரும் நமது திறமையை போல் 14 மடங்கு அதிகமாக உழைக்க கூடிய ஆற்றலை பெற்றவர்கள். அவ்வாறு நாம் உழைக்கவில்லை என்றால் நம் உடல் விடும்.அதனால் பல்வேறு நோய்கள் நமக்கு வந்துவிடும்.எனவே நாம் துருப்பிடிச்சு அழிவதை விட தேய்ந்து அழிவது நன்று.
                         உடல் உறுப்புகளுக்கு தேவையான 5 வகை சுவைகள்


                                              நம்முடைய உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் ஒரு சுவையை விரும்பும்.மொத்தம் 5 வகையான சுவைகள் நமது உடம்பு நன்றாக இயங்குவதற்கு தேவைப்படுகிறது. இவைதான் ஐந்து பூதங்கள் என்று அழைக்கபடுபவை ஆகும்.ஆசிரியர்களுக்கு நுரையீரல் நன்றாக இருக்க வேண்டும். நுரையீரல் , பெருங்குடல்,தோல் ஆகிய உடல் உறுப்புகள் நன்றாக செயல்பட காரம் சாப்பிட வேண்டும். காது,பல்,நகம்,சிறுநீரகம் , எலும்பு ஆகிய உடல் உறுப்புகள் உப்பு சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.உப்பு என்றால் நாம் சாப்பிடும் உப்பு கிடையாது.இளநீர் போன்ற பொருள் சாப்பிடும்போது சுவை கொடுக்கும் உப்பு ஆகும்.கல்லீரல்,கண்,பித்தப்பை போன்ற உடல் உறுப்புகள் ஆற்றலுடன் செயல்பட புளிப்பு சுவை சாப்பிட வேண்டும்.இதயம்,மூளை ,நாக்கு,நமது ஈகோ நன்றாக செயல்பட கசப்பு,துவர்ப்பு நன்றாக சாப்பிட வேண்டும்.மண்ணீரல்,இரைப்பை ,வாய் போன்ற உடல் உறுப்புகள் நன்றாக செயல்பட இனிப்பு சுவை சாப்பிட வேண்டும்.இவ்வாறு 5 சுவைகளையும் அவற்றின் தேவைக்கு ஏற்ப சாப்பிட்டாலே எந்த பாதிப்பும் வராது .இந்த 5 சுவைகள் காரம்,உப்பு,புளிப்பு,நெருப்பு,இனிப்பு ஆகிய ஐந்தும் காற்று,நீர்,ஆகாயம்,நெருப்பு,மண் ஆகிய 5 பூதங்களை  குறிக்கும்.

                                                                    ஆசிரியர்கள் அனைவரும் விதைகள் போன்றவர்கள்.விதைகளுக்குள் பல மரங்கள் இருப்பதை  போல் ஆசிரியர்களும் பல மாணவர்களை வளர்க்கிறார்கள்.ஆசிரியர்களால் தான் இந்த சமூகத்தை மாற்ற முடியும்.எனவே நீங்கள் அனைவரும் உச்சப் பச்ச திறனை வெளிப்படுத்தி செழுமைப்படுதினால் உங்களின் வாழ்க்கை உயரத்தை கூட்டும்.உடலை பாதுகாப்பாக வைத்து கொள்வதற்காக பல்வேறு சுவாச பயிற்சிகளையும் சொல்லி கொடுத்தார்.ஆசிரியர்கள் அனைவரும் ஆர்வமுடன் பயிற்சியில் பங்குபெற்றனர்.கண்ணங்குடி உதவி தொடக்க கல்வி அலுவலர் அடைக்கலராஜ்  உட்பட பலர் கலந்துகொண்டனர்.ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியை சாந்தி  செய்திருந்தார்.

பட விளக்கம் :தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர்களுக்கான கற்பித்தல் எளிது என்கிற ஆளுமை பயிற்சி முகாமில் வாழ்வியல் பயிற்றுனர் மதுரை விஸ்வநாதன்  ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கினார்.

No comments:

Post a Comment