Monday 4 May 2015

                   
                 மகாகுருவின் ஆசிரியர்களுக்கான பயற்சி


                                              கடந்த வாரத்தில் விருதுநகர்  இதயம் முத்து அண்ணாச்சி அவர்களின் ஆர்வத்துடன் ஜே சி இயக்கம் மற்றும் ரோட்டரி சங்கம்  சார்பாக ஜே சி இயக்கத்தின் மகாகுரு பயற்சியாளர் திரு.R.பஞ்சநாதன் அவர்கள் சுமார் 40 ஆசிரியர்களுக்கு கடந்த 10 மாதங்களாக (மாதத்தின் முதல் சனிக்கிழமை அன்று) விருதுநகரில்  தொடர்ந்து நடத்தி வரும் பயற்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பினை பெற்றேன்.11வாது மாதமாக இந்த மாதம் நடைபெற்ற பயிற்சியின் தலைப்பு "நான் தான் அந்த ஆசிரியர் "பயிற்சியின் மூலமாக நிறைய தகவல்களை பெற்று கொண்டேன்.புதிய தகவல்களை நிறைய கேட்டுக்கொண்டேன்.பயிற்சிக்கு வந்திருந்த ஆசிரியர்கள் அனைவரும் நிறைய விஷயங்கள் புதிதாக கற்றுக்கொண்டதாக தெரிவித்தனர்.இதயம் முத்து அண்ணாச்சி உட்பட நிர்வாகிகள் அனைவரும் பயிற்சியின் நிறைவு வரை அங்கேயே அமர்ந்திருந்தது என்னை வியப்பில் ஆழ்த்தியது.அவர்கள் அனைவரும் முழுவதுமாக பயிற்சியில் ஆர்வத்துடன் பங்கு கொண்டனர்.முத்து அண்ணாச்சி அவர்கள் பேசும்போது  மண்டலம் 18ல் உள்ள ஜே சி பயிற்சியாளர்கள் சுமார் 70 பேருக்கு புதிய முயற்சியாக இந்த மாதம் (பயிற்சியாளர்களும் ஆசிரியர்களே என்கிற எண்ணத்தில்) பத்திரிக்கை அனுப்பப்பட்டதாக தெரிவித்தார்கள்.அதில் அவர்கள் அனுப்பிய பத்திரிக்கையை கொரியர் மூலமாக அனுப்பியதால் என்னுடைய முகவரி மாறி இருந்தாலும் என்னுடயை செல் எண்ணுக்கு தொடர்பு கொண்டதல் அந்த பத்திரிக்கை கிடைத்தது.செய்வதை நன்றாக சரியாக செய்து உள்ளது பாராட்டுக்கு உரியது.அருமையான வாய்ப்பு கிடைத்ததுடன் மதிய உணவும் நன்றாக இருந்தது.இந்த அற்புதமான  வாய்ப்புக்கு உதவியாக இருந்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.


லெ .சொக்கலிங்கம் ,
தலைமை ஆசிரியர் ,
சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,
தேவகோட்டை.

No comments:

Post a Comment