Wednesday 6 August 2014

 தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவிகள் தேவகோட்டை நகர சிவன்கோவிலில் அபிராமி அந்தாதி பாடல் பாடுதல் 



      சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவிகள் தேவகோட்டை நகர சிவன்கோவிலில் நடைபெற்ற  ஆடிவெள்ளி சுவாமி கும்பிடும்போது அபிராமி அந்தாதி பாடல்கள்   (100) பாடினார்கள். தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கல்லூரியின் கணித துறையின் முன்னாள் பேராசிரியர்  திரு.சுப்பையா மற்றும் அவரது துணைவியார் உமா ஆச்சி   ஆகியோர்   இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
                                                 6,7,8 வகுப்பு  படிக்கும் மாணவிகள் அபிராமி அந்தாதி ராகத்துடன் 100 பாடல்கள்  படிக்கும் அழகை அனைவரும் பாராட்டினார்கள்.இவர்களுக்கு பயிற்சி கொடுத்த ஆசிரியை செல்வ மீனாள் அவர்களுக்கும்,பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் அவர்களுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment