Tuesday 11 February 2020

காரைக்குடி புத்தகத்திருவிழா போட்டிகளில் பங்கேற்று சான்றிதழ் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு 



தேவகோட்டை -  தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் காரைக்குடி புத்தகத்திருவிழா போட்டிகளில் பங்கேற்று சான்றிதழ் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. 

                    ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்றார். தலைமையாசிரியர் லெ . சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். காரைக்குடியில் நடைபெறும்  புத்தகத் திருவிழாவில்  நடைபெற்ற ஓவிய,கட்டுரை,பேச்சு போட்டிகளில் பங்கேற்று சான்றிதழ் பெற்ற மாணவர்கள் முறையே ஜோயல்,கீர்த்தியா,ஐயப்பன் ஆகியோருக்கு  பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நிறைவாக ஆசிரியை முத்துமீனாள் நன்றி கூறினார்.

 படவிளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் காரைக்குடி புத்தகத் திருவிழா போட்டிகளில் பங்கேற்று  சான்றிதழ் பெற்ற மாணவர்கள் கீர்த்தியா,ஜோயல், ஐயப்பன் ஆகியோருக்கு பள்ளி  தலைமையாசிரியர் லெ . சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தார்.

No comments:

Post a Comment