Wednesday 26 February 2020

பரிசுகளை குவித்து சாதனை படைத்த தேவகோட்டை பள்ளி மாணவர்கள் 

கொன்றைவேந்தன்,வெற்றி வேற்கை ,மூதுரை,நல்வழி பாடல்களை பொருளுடன் சொல்லி பரிசும்,சான்றிதழும் வென்ற மாணவர்கள்




அறநூல் ஒப்புவித்தல் போட்டி

தேவகோட்டை பள்ளி சாதனை








 
தேவகோட்டை – தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளி மாணவர்கள் காரைக்குடியில் நடைபெற்ற அறநூல் ஒப்புவித்தல் போட்டியில் பரிசுகளை குவித்து சாதனை படைத்தனர்.வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.

             ஆசிரியை முத்துமீனாள் வரவேற்றார். தலைமை ஆசிரியர்  லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.  காரைக்குடி தமிழ்ச் சங்கம் சார்பாக காரைக்குடியில் நடைபெற்ற அறநூல் ஒப்புவித்தல் போட்டிகளில் ஆத்திசூடி,கொன்றைவேந்தன்,வெற்றி வேற்கை ,மூதுரை,நல்வழி,நன்னெறி,நீதி நெறி விளக்கம் ஆகிய பாடல்களை  கருத்துடன் ஒப்புவித்து இப்பள்ளி மாணவர்கள் ஹரிபிரியா,லெட்சுமி,யோகேஸ்வரன், முத்தய்யன் ,ஆகாஷ்,ஜெயஸ்ரீ,நதியா,வெங்கட்ராமன்,மெர்சி,
ராஜேஸ்வரி,ஈஸ்வரன்,ஜோயல் ரொனால்ட்,கீர்த்தியா,சிரேகாஆகிய  14 பேர் பரிசு பெற்றனர்.பரிசு பெற்ற மாணவர்கள்  மற்றும் பயிற்சி அளித்த ஆசிரியர்கள் ஸ்ரீதர்,முத்துலெட்சுமி ஆகியோருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பள்ளியின் சார்பில் பெற்றோர்களுக்கும்,மாணவர்களுக்கும் உணவும்,தேநீரும் வழங்கப்பட்டது. தொடர்ந்து ஆறாவது ஆண்டாக இப்பள்ளி மாணவர்கள் பரிசுகளை குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.ஆசிரியை செல்வமீனாள் நன்றி கூறினார்.
                
பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளி மாணவர்கள் காரைக்குடியில் நடைபெற்ற அறநூல் ஒப்புவித்தல் போட்டியில் பரிசுகளை குவித்து சாதனை படைத்தனர்.வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியில் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது.








மேலும் விரிவாக : 


 தமிழ்நாடு அரசு தனி  பேருந்து மூலம் தேவகோட்டையில் இருந்து காரைக்குடிக்கு சென்று போட்டியில் பங்கேற்று அதிக பரிசுகளை குவித்து மாணவர்கள் சாதனை
 தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக போட்டி போட்டு வெற்றி பெற்ற தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் பள்ளி மாணவ,மாணவியர்
அறநூல் ஒப்புவித்தல் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு  பாராட்டு விழா 

தொடர்ந்து ஆறாவது   ஆண்டாக வெற்றி பெற்று சாதனை


 பள்ளி விடுமுறை நாளன்று மாணவர்களை ஆசிரியர்கள் காரைக்குடிக்கு அழைத்து சென்று போட்டிகளில் பங்கேற்க செய்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
 தமிழகத்தில் மாணவர்கள் மறந்து போன தமிழ் அறநூல்களை இளம் பிள்ளை பருவத்திலே பள்ளிகளில்  படிக்க செய்து அதனை போட்டியாக வைத்து பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி  தொடர்ந்து நடத்தி வரும் காரைக்குடி தமிழ் சங்கதுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
 
அறநூல் ஒப்புவித்தலில் உள்ள பாடல் பகுதிகளும்,வெற்றி பெற்ற மாணவர்களின் பெயர்களும் :
 தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக போட்டி போட்டு வெற்றி பெற்ற தேவகோட்டை அரசு உதவி பெறும் பள்ளி மாணவ,மாணவியர்
அறநூல் ஒப்புவித்தல் போட்டியில் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான ஆத்திச்சூடி சொல்லியதில் ஹரிப்ரியா, மூன்றாம் வகுப்பு கொன்றைவேந்தன் சொல்லியதில் லெட்சுமி,யோகேஸ்வரன், ,நான்காம் வகுப்பு வெற்றி வேற்கை சொல்லியதில் முத்தய்யன்  ,ஐந்தாம் வகுப்பு மூதுரை சொல்லியதில் ஆகாஷ்,ஜெயஸ்ரீ,ஆறாம் வகுப்பு நல்வழி சொல்லிய நதியா,வெங்கட்ராமன்,மெர்சி,ராஜேஸ்வரி ,ஏழாம் வகுப்பு நன்னெறி சொல்லியதில் ஈஸ்வரன்,ஜோயல் ரொனால்ட்,கீர்த்தியா ,எட்டாம் வகுப்பு நீதிநெறி விளக்கம் சொல்லியதில் சிரேகா  உட்பட 14 பேர் பரிசுகள் பெற்று வெற்றி பெற்றனர்.இந்த ஆண்டு இப்பள்ளியிலிருந்து மொத்தம் 24 மாணவர்கள் பங்குபெற்றனர்.பெற்றோர்கள் 14 பேர் கலந்துகொண்டனர்.

பள்ளியின் சார்பில் டீ மற்றும் மதிய உணவு வழங்குதல் ;
பள்ளியின் சார்பாக கலந்து கொண்ட 37 மாணவர்களுக்கும்,பெற்றோர்களுக்கும் காலை 11 மணியளவில் தேநீரும்,அனைவருக்கும் பள்ளியின் செலவிலேயே மதிய உணவும்  வழங்கப்பட்டது.காலை உணவு அருந்தாமல் வந்த மாணவர்களுக்கும் உணவு வழங்கப்பட்டது.ஆறு ஆண்டுகளாக பள்ளியின் சார்பில் பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.இப்போட்டிகளில் பெருவாரியான பெற்றோர்களும் பங்கேற்றனர். 

 தனியாக அரசு பேருந்து :
தமிழ்நாடு அரசு தனி  பேருந்து மூலம் தேவகோட்டையில் பள்ளியில் இருந்து  காரைக்குடியில் போட்டி நடைபெறும் பள்ளியின் முன்பாக மாணவர்களையும்,பெற்றோர்களையும் இறக்கி விட்டு மீண்டும் உரிய நேரத்தில் காரைக்குடி பள்ளி வளாகத்தில் இருந்து தேவகோட்டை எங்கள் பள்ளிக்கு மாணவர்களை அழைத்து வந்தோம். தொடர்ந்து ஆறு ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு தனி  பேருந்து மூலம் தேவகோட்டையில் இருந்து காரைக்குடிக்கு பெற்றோர்களையும்,மாணவர்களையும் பள்ளியின் சார்பாக அழைத்து சென்றது குறிப்பிடத்தக்கது.

       


தமிழ்நாடு அரசு பேருந்து இயக்கத்தின் அன்பான வழிநடுத்துதல் ;

 தமிழ்நாடு அரசு பேருந்து இயக்கத்தின் தேவகோட்டை கிளை மேலாளர் மணிவண்ணன்,காரைக்குடி அரசு போக்குவரத்துக்கு கழக வணிக பிரிவு துணை மேலாளர்  நாகராஜன் , நடத்துனர் விஜயகுமார் ஆகியோர் வாகனம் நல்ல முறையில் வந்து சேர உதவிகள் செய்தனர்.இப்பள்ளி மாணவர்கள் தொடர்ந்து ஆறாவது ஆண்டாக இப்போட்டிகளில் தமிழ்நாடு அரசு தனி பேருந்து மூலமாக தேவகோட்டையில் இருந்து காரைக்குடி சென்று பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் ஆகியோர் நல்ல முறையில் வாகனத்தை கொடுத்து எங்களுக்கு சரியான நேரத்தில் செல்வதற்கும்,மீண்டும் பள்ளிக்கு பாதுகாப்பாக வருவதற்கும் உதவி செய்தார்கள்.அவர்களுக்கும் நன்றிகள் பல.



தன்னலமற்ற சேவை :
                             எங்கள் பள்ளி ஆசிரியர்கள் முத்து மீனாள்,செல்வமீனாள் ,முத்துலெட்சுமி  ஆகியோர் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையாகிய இன்றும் பள்ளி ஆசிரியர்கள் ஆர்வத்துடன் மாணவர்களை போட்டிக்கு தேவகோட்டையில் இருந்து காரைக்குடி அழைத்து சென்றது பெருமையான விஷயம் என்று பெற்றோர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.


தொடர்ந்து ஆறாவது ஆண்டாக காரைக்குடி தமிழ் சங்கத்தில் அறநூல் போட்டியில் பரிசுகளை குவித்த பள்ளி மாணவர்கள் வீடியோ 
 https://www.youtube.com/watch?v=P6uy0qGDtSY

 


No comments:

Post a Comment