Wednesday 28 November 2018

 தேசிய வருவாய் வழி திறன் தேர்வு பயிற்சி முகாம் 






                                 
                            தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்காண  தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்விற்கான  பயற்சி நடைபெற்றது .
                                 பயிற்சிக்கு வந்தவர்களை பள்ளி  ஆசிரியை செல்வமீனாள் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.  ராமநாதபுரம் மாவட்டம் ஆதஞ்சேரி ஊராட்சி ஒன்றிய அறிவியல் பட்டதாரி ஆசிரியர் மோகன் மாணவ,மாணவிகளுக்கு  பயற்சி அளித்தார் .தேசிய திறனாய்வு தேர்வு குறித்தும் ,மனத்திறன் தேர்வில் எண் தொடர்கள்,எழுத்து தொடர்கள்,ஆங்கில அகராதிப்படி எழுத்துக்களை வரிசைப்படுத்துதல்,தனித்த எண்ணை கண்டறிதல்,வெண் படங்கள்,ஒத்த உருவங்கள் ,கண்ணாடி பிம்பங்கள்,குறியிடல் ,சிந்தனை கேள்விகள்,கனசதுரம் அமைத்தல்,வார்த்தை அமைப்பு,கணித முறை,நுண்ணறிவுத்திறன் ஆகியன பற்றியும்,கேள்விகள் அமைப்பு,பதில் அளிக்கும் கூறுகள் குறித்தும் பயற்சி அளித்தார் .ஆசிரியர்  கேட்ட கேள்விகளுக்கு மாணவ,மாணவிகள் ஆர்வமுடன் பதில் அளித்தனர்.பயற்சி ஆசிரியரும் மாணவர்களின் தன்னார்வத்தை பாராட்டி கூடுதல் பயற்சி அளித்தார். இத்தேர்வின் மூலம் மாணவர்கள் விரிசிந்தனை,சிக்கலுக்கு தீர்வு காணும் ஆற்றல்,பகுத்தறிவும் திறன் மேம்படுவதால் தங்களின் வாழ்வியல் சிக்கலுக்கு ஆராய்ந்து தீர்வு காணும் திறமையும் உருவாகின்றது.இத்தேர்வானது மாணவர்கள் தங்கள் வரும்  காலத்தில் எழுதவுள்ள பல போட்டி தேர்வுகளுக்கு (RTSE,NTSE,SSC,TNPSC,RRB,UPSC,etc.) அடிப்படையாகவும்,தூண்டுகோலாகவும் அமையும்.
                               இத்தேர்வில் வெற்றி பெரும் மாணவர்களுக்கு 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை நான்கு ஆண்டுகளுக்கு மாதம் ரூ 1000 அரசால் கல்வி உதவி தொகையாக வழங்கப்படுகிறது.இதை நன்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டது.நிறைவாக ஆசிரியை முத்துமீனாள்  நன்றி கூறினார்.


பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில் போட்டி தேர்வுக்கு  தயாராவது எப்படி என்பது தொடர்பாக ஆசிரியர் மோகன் பயிற்சி அளித்தார்.



மேலும் விரிவாக :


தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான போட்டி தேர்வு எழுதுவது எப்படி என்பது தொடர்பான பயிற்சியில்  ஆசிரியர் மோகன் மாணவர்களிடம் கூறியாதவது :

 

முறையான பயிற்சி ,கடின உழைப்பினால் மனத்திறன் தேர்வை (MAT) எளிதாக எதிர்க்கொள்ளலாம்




 என்.எம்.எம்.எஸ்.தேர்வு தொடர்பாக சில தகவல்கள்


           என்.எம்.எம்.எஸ்.தேர்வு எழுதுவதற்கான தகுதிகள் 

         என்.எம்.எம்.எஸ்.தேர்வு எழுதுவதற்கான தகுதிகளான அனைத்து  பள்ளி மாணவர்கள் ஏழாம் வகுப்பில் முழு ஆண்டு தேர்வில் 55 சதவீதம்மதிப்பெண்களுக்கு குறையாமலும்,SC/ST மாணவர்கள்   50 சதவிகிதம் மதிப்பெண்கள் மட்டும் பெற்றிருந்தால் போதுமானது.மாணவர்களின் பெற்றோர் வருமானம் ஆண்டிற்கு 1.50.000க்கு மிகாமல் இருக்க வேண்டும்.தொடர்ந்து பள்ளிக்கு வரும் மாணவர்களாக இருக்க வேண்டும்.
 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை 

பொதுவாக செப்டம்பர்-அக்டோபர் மாதத்தில் தேர்வு பற்றிய அறிவுப்பு வெளிவரும்.www .dge.tn .nic .in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்படும் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து அவற்றில் கூறப்பட்டுள்ள நடைமுறைகளை பின்பற்றவேண்டும்.அரசால் அந்தந்த வருடத்தில் வெளியிடப்படும் புதிய நடைமுறைகளை பின்பற்றவேண்டும்.

தேர்வின் பகுதிகள் 

என்.எம்.எம்.எஸ்.தேர்வானது இரு பகுதிகளை ( தேர்வுகளை ) உள்ளடக்கியதாகும்.

1) பகுதி - 1 - மனதிறன் தேர்வு 

2) பகுதி - 2 - படிப்பறிவு திறன் தேர்வு 

பகுதி -1 - மனத்திறன் தேர்வு 

                     மனத்திறன் தேர்வானது (MAT ) மாணவர்களின் பகுத்தாய்வும் திறன்,காரணம் அறியும் திறன்,சிந்திக்கும் திறன்,முப்பரிமாண வெளியில் காட்சிப்படுத்தி கண்டறியும் திறன் (ability to visualize in space ) போன்றவற்றை சோதித்து அறிவதாக அமையும்.
                      மனத்திறன் தேர்வில் எண் தொடர்கள்,எழுத்து தொடர்கள்,ஆங்கில அகராதிப்படி எழுத்துக்களை வரிசைப்படுத்துதல்,தனித்த எண்ணை கண்டறிதல்,வெண் படங்கள்,ஒத்த உருவங்கள் ,கண்ணாடி பிம்பங்கள்,குறியிடல் ,சிந்தனை கேள்விகள்,கனசதுரம் அமைத்தல் போன்ற வினாக்கள் கேட்கப்பட்டிருக்கும்.அவற்றிற்கு 4 மாற்று விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும்.வினாவின் பொருத்தமான விடைக்குரிய என உள்ள பகுதியை OMR விடைத்தாளில் பென்சிலால் தீட்டவேண்டும்.
                               மனத்திறன் தேர்வில் 90 வினாக்கள் கேட்கப்படும்.ஒவ்வொரு வினாவிற்கும் 1 மதிப்பெண் அளிக்கப்படும்.அணைத்து வினாக்களும் விடையளிக்க வேண்டும்.
                           தவறான விடைக்கு எதிர் மதிப்பெண் கிடையாது.இத்தேர்விற்கு 90 நிமிடங்கள் ஒதுக்கப்படும்.

                    மனத்திறன் தேர்வு ஒரு கடினமான தேர்வு அல்ல.ஆனால் வித்தியாசமான தேர்வு.முறையான பயிற்சி ,கடின உழைப்பினால் மனத்திறன் தேர்வை எளிதாக எதிர்க்கொள்ளலாம்.

          இத்தேர்வானது மாணவர்கள் தங்கள் வரும்  காலத்தில் எழுதவுள்ள பல போட்டி தேர்வுகளுக்கு (RTSE,NTSE,SSC,TNPSC,RRB,UPSC,etc.) அடிப்படையாகவும்,தூண்டுகோலாகவும் அமையும்.மேலும் இத்தேர்வின் மூலம் மாணவர்கள் விரிசிந்தனை,சிக்கலுக்கு தீர்வு காணும் ஆற்றல்,பகுத்தறிவும் திறன் மேம்படுவதால் தங்களின் வாழ்வியல் சிக்கலுக்கு ஆராய்ந்து தீர்வு காணும் திறமையும் உருவாகின்றது.

பகுதி - II - படிப்பறிவு திறன் தேர்வு 

                      படிப்பறிவு திறன் தேர்வானது (SAT)மாணவர்கள் பாடப்பொருளில் பெற்றுள்ள அறிவை சோதித்து அறிவதாக அமையும்.

                இத்தேர்வில் 7ம் வகுப்பு அறிவியில்,கணக்கு,சமூக அறிவியல் பாடங்களில் இருந்தும் (மூன்று பருவங்கள் 0 மற்றும் 8 ம் வகுப்பு அறிவியல்,கணக்கு மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் ( முதல் இருபருவங்கள் 0 இருந்தும் வினாக்கள் கேட்கப்படும்.

               படிப்பறிவு தேர்வில் 90 வினாக்கள் கேட்கப்படும்.ஒவ்வொரு வினாவிற்கும் 1 மதிப்பெண் அளிக்கப்படும்.அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க வேண்டும்.

      தவறான விடைக்கு எதிர் மதிப்பெண் கிடையாது.இத்தேர்விற்கு 90 நிமிடங்கள் ஒதுக்கப்படும்.


மதிப்பெண் பங்கீடு : 
                             அறிவியல்    - 35 மதிப்பெண்கள் 
                              கணக்கு         - 20 மதிப்பெண்கள் 
                              சமூக அறிவியல் - 35 மதிப்பெண்கள் 

                       மொத்தம் - 90 மதிப்பெண்கள் 

மாணவர்கள் தேர்வு செய்யப்படும் விதம் ; 
                                     மனத்திறன் தேர்வு மற்றும் படிப்பறிவு திறன் தேர்வு ஆகிய ஒவ்வொன்றிலும் குறைந்தபட்சம் 40 சதம் மதிப்பெண்கள் பெறுபவர்கள் தேர்வில் தகுதி பெற்றவர்களாக கருதப்படுவார்கள்.SC/ST பிரிவினர் குறைந்தபட்சம் 32 சதம் மதிப்பெண்கள் பெற்றால் போதுமானது.

மாணவர்கள் பெறும் உதவி தொகை : 
                               மனித வள மேம்பாடு அமைச்சகம் (MHRD) நாடு முழுவதும் ஆண்டு ஒன்றுக்கு 1,00,000 மாணவ,மாணவியருக்கு ஒவ்வொரு மாதமும் தலா ரூ.1000 வீதம் 4 வருடங்களுக்கு அளிக்கின்றது.
                                  மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தால் தமிழ்நாட்டிற்கு அளிக்கப்பட்டுள்ள ஒதுக்கீட்டின்படி 6695 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.தேர்வு செய்யப்படும் மாணவர்களின் எண்ணிக்கையானது ,ஒவ்வொரு ஆண்டிலும் உள்ள தமிழ்நாட்டின் மக்கள் தொகை மற்றும் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையை பொறுத்து மாறுபடும்.தகுதி பெற்ற 6695 மாணவர்கள் மாநில இட ஒதுக்கீட்டு கொள்கையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் ( 3 சதம் மாற்று திறனாளிகள் உட்பட )

                           பயிற்சி ஆசிரியர்கள் இணைந்து மிக குறைந்த விலையில் மனத்திறன் தேர்விற்கான புத்தகம் வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.அரசு பள்ளி மாணவர்களுக்கு இந்த பயிற்சியானது மிகுந்த உதவியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment