Saturday 11 March 2017

சுட்டி விகடனின்  மாணவ பத்திரிக்கையாளர் ராஜேஸ்வரிக்கு சென்னையில்   பாராட்டு விழா - கை நிறைய பரிசுகளை வழங்கி வாழ்த்தினார்கள் 

மிக பெரிய விழாவில் நிகழ்ச்சி குறித்து முதல் நபராக  எந்தவிதமான மேடை தயக்கமும் இன்றி தனது கருத்துக்களை பேசி அசத்திய அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவி - தாயார் மகிழ்ச்சி 







 
        ( கடந்த ஆண்டு இதே போட்டியில் பங்கு கொண்டு ராஜேஸ்வரிக்கு வெற்றி கிடைக்கவில்லை.மனம் தளராமல் இந்த ஆண்டு மீண்டும் விடா முயற்சி செய்து சுட்டி ஸ்டாராக தேர்வு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.)

   சுட்டி விகடனின் மாணவப் நிருபராக தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவிக்கு சென்னையில் நடைபெற்ற விழாவில் பரிசுகள்,மாணவியின் வண்ண  படம் அச்சிட்ட காலண்டர்,மாணவியின் வண்ண படம் அச்சிட்ட கப் ஆகியவை பரிசாக வழங்கப்பட்டது.மேலும் உடன் சென்ற பெற்றோர்க்கும்,மாணவிக்கும் தனி,தனியாக பல்வேறு பயிற்சிகளும் வழங்கப்பட்டன.

                      சென்னையில் நடைபெற்ற இந்த விழாவில் கலந்து கொண்ட பல்வேறு தனியார் பள்ளி மாணவர்கள் இடையே நிகழ்ச்சி குறித்து கருத்து கேட்டபோது முதல் நபராக எழுந்து சென்று தனது கருத்துக்களை பதிவு செய்த ராஜேஸ்வரியை அனைவரும் பாராட்டினார்கள்.மாணவியின் தாயார் "எனது மகள் எழுந்து சென்று பேசியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உளள்து.இதற்கு தொடர்ந்த பயிற்சி அளித்த பள்ளிக்கு நன்றி " என்றார்.



பின் குறிப்பு :

சுட்டி விகடனின் மாணவ பத்திரிக்கையாளராக தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவி தேர்வு ( தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இப்பள்ளி மாணவிகள் மாணவ பத்திரிக்கையாளராக தேர்ந்தெடுக்கபடுவது குறிப்பிடத்தக்கது )


 சுட்டி விகடன் சுட்டி ஸ்டார் போட்டியில் மாநில அளவில்  அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளிகளில் தேர்வு பெற்றுள்ள ஒரே மாணவி தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவி மு.ராஜேஸ்வரி ஆவார்.கோடை விடுமுறையில்   
மாநில அளவில் நடைபெற்ற சுட்டி விகடன் பேனா பிடிக்கலாம்,பின்னி எடுக்கலாம் போட்டியில்   அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி அளவில் தேர்வு பெற்றுள்ள ஒரே மாணவி தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவி ராஜேஸ்வரி  சுட்டி ஸ்டாராக தேர்வு பெற்றதற்கு பள்ளி காலை வழிபாட்டு கூட்டதில் பாராட்டு.
 

                  சுட்டி விகடன் சார்பாக தமிழகம் முழுவதும் நடைபெற்ற பேனா பிடிக்கலாம் ,பின்னி எடுக்கலாம் என்கிற சுட்டி ஸ்டார் போட்டி புதுகோட்டை மையத்தில் நடைபெற்றது.இப்போட்டியில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி சார்பாக 11 மாணவ,மாணவியர் கலந்து கொண்டனர்.கோடை விடுமுறையில் இப்போட்டி நடை பெற்றது.இப்போட்டியில்   மாணவர்களை ஆர்வமுடன் ஆசிரியை முத்து மீனாள் பங்கேற்க வைத்தார்.போட்டிக்கு கோடை விடுமுறையிலும் தயார் செய்த ஆசிரியைக்கும்,தேர்வான மாணவி ராஜேஸ்வரிக்கும்  பள்ளி காலை வழிபாட்டு கூட்டதில் தலைமை ஆசிரியர் லெ சொக்கலிங்கம்,ஆசிரிய,ஆசிரியை மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.இந்த ஆண்டும் முழுவதும் மாணவி நன்றாக சுட்டி விகடனுக்கு எழுதவும் ,தொடர்ந்து பல வெற்றி பெறவும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.சுட்டி விகடன் இதழுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.







                          








          

No comments:

Post a Comment