Monday 30 January 2017

பதிகங்கள் ஒப்புவித்தல் போட்டியில்  வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் பதிகங்கள் பாடி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.



                            விழாவிற்கு வந்தவர்களை பள்ளி மாணவி ராஜி  வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினர்.தேவகோட்டை முத்தமிழ் வேத திருச்சபை நடத்திய போட்டியில் பங்கு பெற்று திருவீழிமிழலை- திருச்சிற்றம்பலம்,பதிகங்களில் இரண்டாம் திருமுறை ஆகிய பாடல்களை ஒப்புவித்து  பரிசு பெற்ற வெங்கட்ராமன்,கீர்த்தியா,சந்தியா,உமா மகேஸ்வரி ஆகியோருக்கும்,பயிற்சி அளித்த ஆசிரியை கலாவல்லிக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.நிறைவாக மாணவர் ஜீவா நன்றி கூறினார்.
பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் பதிகங்கள் பாடி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம்,பயிற்சி அளித்த ஆசிரியை கலாவல்லி உள்ளனர்.

No comments:

Post a Comment