Saturday 12 November 2016

அனைவரும் ஏதாவது ஒரு வகையில் விவசாயம் செய்யுங்கள்
விவாசய கல்லூரி டீன் பேச்சு

தேவகோட்டை – தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற  தேசிய கல்வி நாள் விழாவில் அனைவரும் ஏதாவது விவசாயம் செய்யுங்கள் என்று டீன் பேபி ராணி பேசினார்.


                 விழாவிற்கு வந்தவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் வரவேற்றார்.ஓய்வு பெற்ற நகராட்சி நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சுப்ரமணியன் முன்னிலை வகித்தார்.தனியார் விவாசய கல்லூரி டீன் பேபி ராணி தலைமை தாங்கி பேசுகையில் , அனைத்து மாணவர்களும் சிறு வயது முதலே வீட்டை சுற்றிலும் சிறிய அளவிலாவது விவசாயம் செய்யுங்கள் .இன்று பருவமழை பொய்த்து போனதாலும்,பெருவாரியான நிலங்கள் விலை நிலங்களாக மாறி விட்டதாலும் , கூட்டு குடும்பங்கள் குறைந்து விட்டதாலும் ,உழைப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டதாலும் விவசாயம் செய்வோர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது.எனவே நீங்கள் உங்கள் பெற்றோரிடம் சொல்லி பசு மாடு வளர்த்தால் கூட அது விவசாயம்தான்.எதாவது ஒரு வகையில் விவசாயம் செய்யுங்கள்.மாணவர்களாகிய நீங்கள் சிறு வயது முதலே அந்த பழக்கத்தை வளர்த்து கொள்ளுங்கள்.கிடைக்கும் அனைத்து தகவல்களையும் படித்து கொள்ளுங்கள்.கல்விதான் உங்களுக்கு வாழ்க்கையில் கிடைத்துள்ள மிகபெரிய சொத்து.கல்வியோடு தொடர்பு படுத்தி இயற்கை விவசாயத்தை அதிக படுத்துங்கள் என்று பேசினார்.மாணவர்கள் ஜீவா,காவியா,சின்னமாள் ,பரமேஸ்வரி,ரஞ்சித்,தனலெட்சுமி,ராஜேஷ் ஆகியோர் விவசாயம் தொடர்பாக கேள்விகள் கேட்டு பதில்கள் பெற்றனர்.நிறைவாக ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.

பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற தேசிய கல்வி நாள் விழாவில் விவசாய கல்லூரி டீன் பேபி ராணி பேசினார்.உடன் பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம்,நல்லாசிரியர் சுப்ரமணியன் .

No comments:

Post a Comment