Tuesday 25 October 2016

திருமுருகாற்றுப்படை ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியில் பாராட்டு விழா 

தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் திருமுருகாற்றுப்படை ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ,மாணவியருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.


                            தேவகோட்டை சௌபாக்கிய துர்க்கை அம்மன் கோவிலில் நடைபெற்ற திருமுருகாற்றுப்படை ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியில் பாராட்டு விழா  நடைபெற்றது.விழாவிற்கு வந்தவர்களை  வாசுகி வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார் .பரிசு பெற்ற மாணவர்களான திவ்ய பாரதி,அஜய்,பிரஜித்,கனிஷ்கா.முத்தையன்,திவயஸ்ரீ,சத்தியா,அம்முஸ்ரீ.மகாலெட்சுமி,அஜய் பிரகாஷ்,பாக்கிய லெட்சுமி,நந்தகுமார் ,ராஜேஷ்,உமா மகேஸ்வரி,ராஜேஸ்வரி,கார்த்திகா ,தனலெட்சுமி ஆகியோருக்கும், பயற்சி அளித்த ஆசிரிய,ஆசிரியைகளுக்கும்  பாராட்டு தெரிவிக்கப்பட்டது.பள்ளி விடுமுறை நாளன்று நடைபெற்ற இப்போட்டிக்கு பெற்றோர்கள் கூலி வேலை பார்ப்பதால் அவர்களால்  போட்டிக்கு அழைத்து செல்ல முடியாத சூழ்நிலையில் பள்ளி  ஆசிரியை மாணவர்களை போட்டிக்கு அழைத்து சென்றது குறிப்பிடத்தக்கது.நிறைவாக ஆசிரியை சாந்தி  நன்றி கூறினார்.

பட விளக்கம் ; திருமுருகாற்றுப்படை

ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்று

பரிசு பொருள்களுடன் தேவகோட்டை

சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி

மாணவ,மாணவியர்

No comments:

Post a Comment