Friday 24 June 2016

 மெகா யோகாவில் கலந்து கொண்ட மாணவர்களுக்கும்,ஆசிரியர்களுக்கும் பாராட்டு விழா

தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும்  நடுநிலைப் பள்ளி மாணவர்கள் தேவகோட்டையில் கந்தசஷ்டி கழகம் சார்பாக நடைபெற்ற மெகா யோகாவில் கலந்துகொண்டதற்கு பாராட்டு விழா பள்ளியில் நடைபெற்றது.



                                          விழாவில் ஆசிரியை சாந்தி வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.கந்த சஷ்டி விழா கழகம் சார்பாக நடைபெற்ற மெகா யோகாவில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் கழகத்தின் சார்பாக சான்றிதழ் வழங்கப்பட்டது.பள்ளியில் இருந்து மாணவர்களை மெகா யோகாவிற்கு ஒருங்கிணைத்து அழைத்து சென்ற ஆசிரியர்கள் கருப்பையா , ஸ்ரீதர் ஆகியோருக்கும் பரிசு வழங்கப்பட்டது.ஆசிரியை காலவல்லி நன்றி கூறினார்.


பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும்  நடுநிலைப் பள்ளி மாணவர்கள் தேவகோட்டையில் கந்தசஷ்டி கழகம் சார்பாக நடைபெற்ற மெகா யோகாவில் கலந்துகொண்டதற்கு பாராட்டு விழா பள்ளியில் நடைபெற்றது.

No comments:

Post a Comment